Monday, October 20, 2008

தேவாரம்: தமிழ் ஈழம் பற்றிப் பாடிய நாயன்மார்கள்!

இன்றைய சூழ்நிலையில், ஈழத்தில் வாழும் நம் சகோதர சகோதரிகளை அலைகழிக்கும் அல்லல்கள் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து.
ஈழ மக்களின் அமைதிக்கு உடன்பாடில்லாத எந்தவொரு செய்கைக்கும் பாரத தேசம் துணை செய்யாது என்று வாயால் சொல்லக் கூட இம்புட்டு தயக்கமா? இத்தனை அரசியலா? ஈழ அரசியல்/படையியல் ஒரு விநோதம் என்றால், இந்திய அரசியலும் எந்த வகையிலும் சளைத்தது இல்லை போலும்.

பக்தி இலக்கியங்களிலும் பெளத்த அரசியலை, அதுவும் ஈழத்து பெளத்த அரசியலைச் சிலர் கிழி-கிழின்னு கிழிச்சிருக்காங்க! :) யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நம்ம சிறு பிள்ளை, ஆளுடைய பிள்ளை, நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் தான்! "புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், அவர்கள் எத்தராகி நின்று உண்பவர், அவர்கள் பேச்சைக் கேட்காதீங்க" என்று சீறுகிறார்!

சிவன் பாட்டு வலைப்பூவில், தேவாரப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்று ஈழத்து தேவாரங்கள்...

நாயன்மார்களால் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், ஈழ நாட்டிலும் உண்டு! இரண்டே இரண்டு அழகிய தலங்கள்!
1. மாதோட்டம்-திருக்கேதீஸ்வரம்
2. திருக்கோண மலை

பாடியவர்களும் இரண்டே இரண்டு பேர் தான்!
1. ஞான சம்பந்தர்
2. சுந்தர மூர்த்தி நாயனார்

இவர்கள் இலங்கைக்குச் சென்று அங்கு ஈசனைச் சேவித்துப் பாடினார்களா, இல்லை இராமேஸ்வரம் திருக்கரையில் இருந்தவாறே தொழுது ஏத்தினார்களா என்பது குறித்து சைவ நூல்களில் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஆனால் ஈழத்துத் தேவாரங்கள், ஈழம் போலவே அத்துணை அழகு! பார்க்கலாம் வாரீயளா?



நான் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியதே கதிர்காமமும், கோணேஸ்வரமும், கேதீஸ்வரமும் தான்.

திருச்செந்தூரைத் தானே அலைவாய் என்கிறோம்?
ஆனால் உண்மையில் ஒரு மலையையே அலைத்து அலைத்துத் தாலாட்டும் இயற்கை அழகு, திரிகோணமலைக்கு உண்டு. படங்களில் பார்க்கும் போதே சொக்கிப் போவீர்கள்.
காபி அண்ணாச்சி சொல்லி இருக்காரு, என்னை அங்கிட்டு அழைத்துப் போகிறேன்-ன்னு. ரிஷான் ஷெரீப்பும் சொல்லி இருக்கார். பார்க்கலாம். ஈழத்துக்கு ஒரு சிறு விடிவு காலமாச்சும் தோன்றி, இறைவன் திருவுள்ளம் கனிய, பாலாவிக் கரையில் கேதீஸ்வரரையும், கதிர்காமத்து முருகனையும் அடியேன் கண்ணாரக் கண்டு சேவிக்க வேண்டும்!

திருக்கேதீஸ்வரம் என்னும் திருக்கேதீச்சரம், மன்னாருக்கு அருகே பாலாவி ஆற்றின் கரை மேல் உள்ளது. மாதோட்டத்துக்கு அருகில்.

கேதீச்சரத்துக்குக் காசிக்கு இணையான சிறப்பு! சிவ பெருமானுக்குக் காவடி எடுப்பது இங்கு மட்டுமே! தீர்த்தக் காவடி!
சிவலிங்கத்துக்கு நாமே திருமுழுக்காட்ட (அபிஷேகம்) முடியும்!
எப்படிக் காசியில் கங்கை நீரை முகந்து உலகநாதரை முழுக்காட்டலாமோ, அதே போல் பாலாவியில் நீர் முகந்து, தீர்த்தக் காவடி எடுத்து, கேதீஸ்வரருக்குத் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யலாம்!

படத்துக்கு நன்றி: சிவத்தமிழோன் ஐயா; அவரின் திருக்கேதீஸ்வரம் பதிவு இங்கே!

இறைவன் = கேதீசுவரர். இறைவி = கெளரியம்மை.
சம்பந்தர் பதிகம் ஒன்று. அதில் பதினோரு பாடல்கள்! சுந்தரர் பதிகம் ஒன்று. அதில் பத்து பாடல்கள்! ஆக மொத்தம் இருபத்தியோரு பாடல்கள்!

தீபாவளிக்கு மறுநாள் கேதார-கெளரி விரதம் என்று எங்கள் ஊர் வாழைப்பந்தல் பக்கமும், இன்னும் வடார்க்காடு முழுதும், அதிரசம் சுட்டு, நோன்பு எடுப்பார்கள். இந்தக் கெளரி-கேதார தம்பதிகளைத் தான் இருத்தி நோன்பெடுக்கும் வழக்கம்!

எப்படி ராகு தோஷங்களுக்கு கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் அருகில் உள்ள திருநாகேஸ்வரமோ, அதே போல் கேது தோஷங்களுக்கு, திருக்கேதீஸ்வரம்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆறுமுக நாவலர் அவர்களின் முயற்சியில், தமிழர்கள் பலரை ஒன்று திரட்டி, ஆலயம் மீண்டும் செப்பனிடப்பட்டது!
போரில், இலங்கை அரசின் சிங்களப் படைகள் கோயிலைக் கையில் எடுத்துக் கொண்ட பின், மீண்டும் வழிபாடுகள் நின்று போயின. கோயிலும் நாசமடைந்து இருந்தது!
தமிழர்கள் மீட்புக் குழுவினரின் முயற்சியால், இப்போது ஓரளவுக்கேனும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் படைகள் இன்னும் முழுமையாக அங்கிருந்து வெளியேறவில்லை போலும்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த இடத்துக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி என்னும் மரியாதை கூடவா இல்லை ஒரு அரசுக்கு? :((



சரி, தேவாரத்தைப் பார்க்கலாமா?
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர்
எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின்
மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே!

- சம்பந்தர்

மேலோட்டமான பொருள்:
புனைந்த துகிலை ஆடையாய்க் கொண்ட பெளத்தர்கள் புறம் பேசுவதே கொண்டுள்ளார்கள். அவர்களுடன் சில சமணர் ஏமாற்று வேலையும் செய்கிறார்கள். அவர்கள் நின்று கொண்டே உண்பவர்கள். அவர்கள் பேச்சை யாரும் கேட்கவே கேட்காதீர்கள்!
மத யானையைத் தோலுரித்துப் போர்த்தியவர் ஈசன். அவர் மாதோட்ட நகரிலே, பாலாவியின் கரையில் கேதீச்சுரத்தில் அருள் செய்கின்றார். அங்கு சென்று அடையுங்கள்!

என்ன பெளத்தர் மீதும், சமணர் மீதும், சின்னப் பிள்ளையான சம்பந்தர் இப்படி வார்த்தையைக் கொட்டுகிறாரே-ன்னு தோனும்! ஆனால் அந்தக் காலகட்டத்துக்குச் சென்று வந்தால் தான் சற்றே உண்மை புலப்படும்.

அரசாங்கத்தைக் கைக்குள்ளே போட்டுக் கொண்டு, சமயம் வளர்க்காமல், சமயம் பார்த்து சமயம் வளர்க்கும் வித்தையில் பெளத்தர்கள் மித மிஞ்சினார்கள்.
அரசு அலுவல்களில் நேரடி ஈடுபாடு. மக்கள் பிரச்சனைகளில் குளறுபடிகள்.
இவர்கள் துறந்தவர்களின் கடமைகளைச் செய்வதால், அதையே அரசாணை மூலமாக அனைவரும் செய்ய வேண்டும் என்ற கட்டளைகள் சரி வருமா? அதான் ஒரு கட்டத்தில் இவ்வளவு வெறுப்பு தலை தூக்கியது!

பாலகுமாரனின் உடையார் நாவலில், இராஜராஜனின் மகள் சந்திரமல்லிலையை, மருத்துவம் செய்கிறேன் பேர்வழி என்று, நாகைப் புத்த விகாரத்தில் மூளைச் சலவை செய்து, அரசியல் காய்களை எப்படியெல்லாம் நகர்த்தினார்கள்-னு வரும். அது போல ராஜரீக விஷயங்களில் ஏற்பட்ட பல கசப்புகள் தான் சம்பந்தரை இப்படிப் பேச வைத்தது போலும்!

மகான் புத்தரை வெறுத்தாரில்லை! சமயங்களுக்குள் என்றைக்கும் பிணக்கு இருந்ததுமில்லை! சமயத்தைப் பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் மக்களின் அடாவடிகளால் தான் சமயப் பிரச்சனைகளே தலைதூக்குகின்றன!
இறைவன் தங்களைக் காப்பாற்றும் நிலை போய், மானிட ஜென்மங்கள் தாங்களே, தங்கள் தங்கள் இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று மடமையால் தோன்றுவது தான் இத்தனை அடாவடிகளும்!

சுந்தரமூர்த்தியும் திருக்கேதீஸ்வரத்தைப் பாடுகிறார். ஆனால் சம்பந்தர் காலத்தில் இருந்தது போல் இவ்வளவு பெளத்த வெறுப்பு அவர் காலத்தில் இல்லாமல் போனது! நல்லது தான்!
இதோ சுந்தரரின் ஈழத்து தேவாரம்!

மூவர் என இருவர் என
முக் கண்ணுடை மூர்த்தி
மாவின் கனி தூங்கும் பொழில்
மாதோட்ட நன் னகரில்
பாவம் வினை அறுப்பார் பயில்
பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திருக்
கேதீச்சரத் தானே!


மேலோட்டமான பொருள்:
முத்தொழில் என்றாலும் அதில் நீ உள்ளாய்! இரு தெய்வங்கள் என்றாலும் அதில் நீ உள்ளாய்! முக்கண்ணப்பா!
மாம்பழங்கள் தூங்கும் சோலைகள் நிறைய உள்ள மாதோட்டம்!
அங்கு பாவங்களைப் போக்க வல்ல நெறியாளர்கள் பல பேர் பயில்கிறார்கள், புழங்குகிறார்கள்.
பாலாவியின் கரை மேல் இருக்கும் தேவரே! என்னை ஆட்கொள்வீர் கேதீஸ்வரா!

மாவின் கனி தூங்கும் பொழில் = மாதோட்டத்தில் மாம்பழங்கள் பிரபலமா என்ன?

சரி, அது எப்படி மாம்பழம் தூங்கும்?
நல்ல தூக்கத்தில் அசைவே இருக்காது. அடித்து போட்டது போல் தூங்குவார்கள்.
மாதோட்ட மாம்பழங்கள் ஒவ்வொன்னும் பெரிது பெரிதாகப் பழுத்து இருக்கு! அதனால் காற்றில் ஆடக் கூட முடியாமல், அப்படியே அசைவில்லாமல் தொங்குகின்றனவாம்.
அதான் மாவின் கனி தூங்கும் பொழில் (சோலை) என்றார் சுந்தரமூர்த்தி நாயனார்!


அடுத்து என் உள்ளம் கவர்ந்த கோணேஸ்வரம்; திரு கோணமலை, திரிந்து திரிகோணமலை ஆனது. கடலோர மலையில் உள்ள அழகான ஆலயம்!

திருகோணமலை வடகிழக்கு மாகாணத்தின் தலைநகர். கிழக்குக் கரைத் துறைமுகம். தட்சிண கைலாசம்-தென் கயிலாயம் எனவும் சிறப்பு உண்டு!
இறைவர் = கோணேசுவரர். இறைவி = மாதுமையாள்.

சுடுநீர்ச் சுனைகள் உள்ள தலம். ஆலயத்தின் தீர்த்தமான மகாபலி கங்கை, குகையில் சுரந்து, மலையைப் பிரதிட்சணமாகச் சுற்றி, கடலில் விழுகிறது.
மகாபலி கங்கை திருகோணேஸ்வரத்திலும், மாணிக்க கங்கை திருக்கேதீஸ்வரத்திலும், காவிரிக் கங்கை கதிர்காமத்திலும் பாய்கிறது.

ஈசனின் ஆணையின் பேரில், கயிலை போன்ற மாதிரி மலையை, நான்முகன் உருவாக்கித் தர, அங்கு ஈசன் குடி கொண்டான்! வாயு, ஆதிசேடன் மேல் கொண்ட பொறாமையில், இம்மலைகளை அபகரிக்க...ஈசன் தண்டித்து, திருத்தி அருளினார். மும்மலைகளை காளத்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோணமலை என்று மூவிடங்களில் வைக்கச் சொன்னார் என்பது தல வரலாறு! இதனால் இது தட்சிண கைலாசம் ஆனது!

இராவணன் வணங்கிய ஈசனும் திருகோணமலை ஈசன் தான்!
தன் தாயாருக்குப் பூசை செய்ய ஒரு சிவலிங்கம் தேவைப்பட்ட போது, கயிலையில் இருந்தே நேரடியாக உங்களுக்கு எடுத்துத் தருகிறேன் என்று ஆணவம் பொங்கப் பேசினான்.
தவத்தால் கயிலை லிங்கம் பெறாது, பலத்தால் பெற்று விடலாம் என்று இறுமாந்தான்.

நந்தியம்பெருமானைக் குரங்கே என்று எள்ளி நகையாடி குரங்கால் நகர் அழியச் சாபம் பெற்றான். அப்போதும் பணியாது, பலத்தால் மலையைத் தூக்க எண்ணிய போது தான், ஈசன் தன் கால் சுண்டு விரலால் அவனை செருக்கைச் சற்றே அடக்கினார். சிவலிங்கமும் கொடுத்து அனுப்பினார். அப்போதும் கர்வம் விட்டபாடில்லை!

அந்த லிங்கத்தை வைத்து, மற்ற சிவாலயங்களை எல்லாம் திருகோணமலைக்குக் கீழ்ப்படிய வைக்க எண்ணினான். விநாயகப் பெருமான் சற்றே விளையாட, அது பாரதத்தில் திருக் கோகர்ணத்திலேயே தங்கி விட்டது! பெயர்த்து எடுக்க முடியாமல் வெறுங்கையுடன் இலங்கை திரும்பினான்.

பின்னர் அன்னையின் அறிவுறுத்தல் பேரில், சாட்டை சொடுக்கி, சிவாலயம் அமைக்க முடியாது என்று உணர்ந்து வேண்ட, ஈசன் அவனுக்கு மூன்று லிங்கங்களைக் கொடுத்து அருளினார். திருகோண மலையின் மூன்று கோணங்களிலும் நிறுவிட, இராவணன் நிறுவிய சிவலிங்கங்கள் ஆனது!

இதோ சம்பந்தர் திருகோணமலையைப் பாடும் தேவாரம்:
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த, கோண மாமலை அமர்ந்தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான், கருத்துடை ஞான சம்பந்தன்
உற்ற செந்தமிழார் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல் வினை அடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

மேலோட்டமான பொருள்:
குற்றம் இல்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஊர். ஒலிக்கும் கடல் சூழ்ந்த ஊர். கோணேஸ்வரம் என்னும் இந்தத் திருக்கோணமலை. அங்கு அமர்ந்துள்ள சிவ பெருமானை, கற்ற ஞானமும், கேள்வி ஞானமும் கொண்ட இருவருமே வந்து வணங்குகிறார்கள்.

அவர்களின் தலைவனான காழியர் கோன் ஞானசம்பந்தன் என்னும் நான், செந்தமிழில் பதிகம் பாடினேன். கோணமலை என்பது செந்தமிழ் மலை! அந்த மலை மீதான இப்பதிகத்தை உரைப்பவர், கேட்பவர் என்று அத்தனை பேரும் உயர்வு காண்பார்கள்! அவர்களுடைய சுற்றமும் நலம் பெறும்! தொல் வினை நீங்கப் பெறுவர். பொலிவுடன் விளங்குவார்கள்!

கேதீஸ்வரர்-கெளரி அம்மை

சம்பந்தர் நற்றமிழால் பதிந்த இந்த பதிகம் பொய்யாகாமல், ஈழத்தில் பொலிவு தோன்றும் நாள் எந்நாளோ?

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா என்பதால்....
இலங்கைக்கும் இறைவா போற்றி!

சிவோஹம்!
திருச்சிற்றம்பலம்!



இந்த ஆலயங்களுக்கு நான் நேரில் சென்றதில்லை. சென்றவர்கள் சிலாகித்துச் சொல்லக் கேட்டிருக்கேன். தேவாரம் படித்துள்ளேன். அவ்வளவே! அதனால் ரசித்துச் சொல்ல முடியுமா என்ற தயக்கம்.
உடனே பல விவரணங்களையும், படங்களையும் இந்தப் பதிவுக்காகத் தந்துதவினாள் என் தோழி! தமிழ்நாட்டு மருமகள் ஆகும் சதாயினி நடேசபெருமானுக்கு என் நன்றி! :)

35 comments:

கோவி.கண்ணன் said...

கேஆர்எஸ்,

கடும் துயரில் இருப்போர்க்கு கைகொடுப்பது ஆன்மிக பலம் என்றே சொல்லுவார்கள்.

அந்த வகையில் அவர்களின் துயர்துடைக்கும் இடுகையாகத் தான் நான் இதனைப் பார்க்கிறேன்.

உங்கள் ஆன்மிகப் பணியை பாராட்ட சொற்கள் ஏது ?

என்னாட்டவர்கும் இறைவா போற்றி !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
கடும் துயரில் இருப்போர்க்கு கைகொடுப்பது ஆன்மிக பலம் என்றே சொல்லுவார்கள்//

ஒரு பிரச்சனைக்கு சரியான தீர்வே கண்ணுக்குத் தெரியாத போது, வரப்போகும் தீர்வை நோக்கி, வாழ்க்கையை நம்பிக்கையுடன் நகர்த்திச் செல்ல கை கொடுப்பது = தர்மத்துள் எல்லாம் தர்மம்! - இது தான் கீதையின் சாரம்-ண்ணா!

அனன்யாஸ் சிந்தயந்தோ மாம்!
(கவலையிலேயே உன்னை அழித்துக் கொள்ளாதே)

யோக ஷேமம் வஹாம்யஹம்!
(உலக நன்மையை இறை நன்மையாகக் கருதி விடு!
இனி நான் சுமந்து கொள்கிறேன்!)

//அந்த வகையில் அவர்களின் துயர்துடைக்கும் இடுகையாகத் தான் நான் இதனைப் பார்க்கிறேன்//

அதுக்குத் தாண்ணா இதை எழுதினேன்!

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை SLA (Sri Lankan Army) பிடியிலிருந்து ஓரளவு மீட்டுக் கொடுத்தனராம் ஆறுமுக நாவலரும் ஆலயக் குழுவும்!

அந்த நம்பிக்கை போல் சிறு சிறு நம்பிக்கைகள் இன்னும் துளிர்க்கட்டும்! ஈழத்தில் இன்னல் குறைய இறைவனும் அருளட்டும்!

நம் ஈழத்தின் இன்பம் பொருட்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

சிவத்தமிழோன் said...

ஈழத்து பாடல்பெற்ற திருத்தலங்களைப்பற்றி தாங்கள் எழுதிய வலைப்பதிவால் பேரானந்தமடைந்தேன். தங்கள் சமயப் பணி ஓங்க எல்லாம் வல்ல சிவனருள் கைகூடட்டும்.


இங்கு தங்களுடைய கருத்து சிறிது வழு கொண்டதாக அமைந்துவிட்டது. ஆறுமுகநாவலர் என்பவர் ஆங்கிலேயர் காலத்தில் சைவத்தை கிருத்தவத்திடம் இருந்து காத்த பெருமகன். ஈழத்தில் அவரை ஒரு நாயனாராகவே போற்றுவர். அவருக்கு திருவாவடுதுறை ஆதினம் நாவலர் எனும் பட்டத்தை அவரது சொற்திறன் கண்டு வழங்கி பெருமை சேர்த்தது. நாவலரின் பணி இலங்கை என்று சுருங்கியிருக்கவில்லை. சிதம்பரத்தில் பள்ளிக்கூடம் அமைத்து கல்விபோதனைக்கு வழிசமைத்தவர். தனக்கு போதித்த ஆசானின் அவாவை நிறைவேற்ற பைபிளைத் தமிழில் முதலில் மொழிமாற்றியவரும் இவர்தான். இவர் மீள்பிரதிட்டை பண்ணிய சைவ சித்தாந்த நெறியே ஈழத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது. போர்த்துகேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆட்சிக்குப்பின் ஆங்கிலேயரின் ஆட்சி இலங்கையை அடிமைப்படுத்தியது.(இரண்டு நாடுகளாக இருந்த இலங்கையை ஒன்றாக்கிய பெருந்தகைகள்(!) இவர்கள் தான்.ஆண்ட மூவரும் தமதிச்சைக்கு ஏற்றாற்போல் சைவ ஆலயங்களை அழித்து நிர்மூலமாக்கினர். ஆங்கிலேயர் பொதுவாக வழிபாட்டுக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். ஆனால் முதல் இருவரும் இலங்கையில் ஒரு மூலை முடுக்கில் கூட கோயில் இருக்கக்கூடாது என்பதில் தேளிவான முடிவுடன் இருந்தனர். அதனால அனைத்துக் கோயில்களையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். அதனால்த்தான் இந்தியாவில் உள்ளதுபோல் கருங்கல்லால் அமைந்த எந்தவொரு புராதன ஆலயமும் இலங்கையில் இல்லை.(பொன்னம்பலவாணேசுவரம் எனும் சிவதலம் சேர்.பொன்.இராமநாதன் எனும் இலங்கையின் அன்றைய கால தமிழ்த் தலைவரால் கொழும்பில் கருங்கல்லால் சென்றநூற்றாண்டில் கட்டப்பட்டது)

இலங்கையின் ஐந்து மூலைகளிலும் ஐந்து ஈசுவரங்கள் பௌத்தம் வரமுதலே இருந்தன என்று சிங்கள வரலாற்று நூல்களே தவறுதலாக சில இடங்களில் ஒப்புக்கொள்ளவேண்டியதாயிற்று. விஜயன் என்பவன் வடநாட்டில் இருந்து வந்தபோது (சிங்களவரின் முதல் தகப்பன் இவன் தான் என்று அவர்களின் வரலாறு கூறுகிறது)அவனோடு வந்த உபதிட்ட என்னும் பிராமணன் திருக்கேதீசுவரத்தில் பூசை செய்ததாய் அவர்கள் வரலாற்று நூலில் உண்டு.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டபோது இவ்வாலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் இருந்த சிவலிங்கம் சிறு காயங்களோடு சைவப்பெரியார்களால் ஆலயம் அமைந்திருந்த சூழலில் தேடியபோது கண்டெடுக்கப்பட்டது. அந்த மிகப்பெரிய சிவலிங்கமே மூலஸ்த்தான வழிபாட்டுக்கு உகந்தத்தற்ற காரணத்தால் சாதரண மக்கள் அபிடேக வழிபாடு செய்யக்கூடியதாக இன்று ஆலய உள் வளாகத்திற்குள் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.

அதற்காக அரசின் கொடும் யுத்தம் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயத்தை சும்மாவிட்டுவிட்டதென்று சொல்லவரவில்லை. ஆனால் ஆறுமுகநாவலர் என்பவருக்கும் இன்றைய திருக்கேதீச்சர புணர்நிர்மாணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவுபடுத்தவே இதை எழுதியுள்ளேன்.
to know about navalar please click these links.

http://www.tamilcanadian.com/page.php?cat=206&id=977

http://en.wikipedia.org/wiki/Arumuga_Navalar

ஏறத்தாழ 1700 சைவ ஆலயங்கள் சேதமடைந்துள்ளன யுத்தத்தால். please check here.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=1691

என்னிடம் திருக்கேதீச்சரத்தின் புகைப்படங்கள் உண்டு.அனுப்பிவைக்கின்றேன், தங்கள் மின்னஞ்சலைத் தருவீர்களேயானால். எனது மின்னஞ்சல் sivathamiloan@yahoo.com

என்னுடைய வலைப்பூவில் திருக்கேதீச்சரத்தில் ஓடும் பாலாவித் தீர்த்தத்தின் புகைப்படமும் ஆலயப் புகைப்படமும் பிரசுரித்துள்ளேன்.

போர்த்துக்கேயர் அன்று அழித்து அவ்விடத்தில் கட்டிய மாதாகோயிலில் இன்றும் அருள் உள்ளமை திருக்கேதீச்சரம் இருந்த மண் கூட அருள் வழங்கும் ஆற்றலுடையது என்பதை கட்டியம் கூறுகிறது. இன்று குறித்த திருக்கேதீச்சரம் உள்ள இடத்தில் (மன்னார்) ஏறத்தாழ 90வீதமானவர் கிருத்தவராய் மதம்மாற்றப்பட்டுள்ளனர்.யுத்த சூழலில் அரசியல் பலம் அற்றதால்( RSSஉம் விசுவகிந்து பரிசித்தும் இங்கு சைவ ஆலயங்களின் மீது குண்டு விழுகையில் மௌனமாய் இருக்கும் பித்தலாட்ட அமைப்புகள்........ஒரிசாவில் ஏனையோரை வஞ்சிக்கத்தான் தெரியும் இவ்வமைப்புகளுக்கு) இயங்காமல் இருக்க,இத்தாலி.......போன்ற அரசியல் பின்புலமுடைய கிருத்தவம் இலகுவாக தமது சமயத்தை சைவரிடம் பரப்பும் சூழலை அமைத்துக் கொடுத்தது. ஆனாலும் பரிதாபம்......! மடுமாதா ஒருமுறை இத்தாலியின் கண்டிப்புக்கும் கட்டுப்படாத பௌத்த பேரினவாதத்தால் இடம்பெயரவேண்டிய சூழல் அமைந்த சந்தர்ப்பமும் உண்டு. இது இப்படி என்றால் நாதியற்ற சைவ ஆலயம் எப்படி அங்கு இயங்க முடியும்?

to get to know more about saivism in srilanka
http://www.tamilcanadian.com/page.php?cat=76&id=464

சிவத்தமிழோன் said...

தங்களின் இனிய தமிழில் இன்னும் பல ஈழத்து சைவ ஆலயங்கள் பற்றி பதிவுகள் மலரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். நன்றி. ஓங்கட்டும் தங்கள் சிவப்பணி.

VSK said...

ஈழத் தேவாரங்கள் மிக நன்றாக வந்திருக்கின்றன ரவி.

வாழ்த்துகள்!

Kavinaya said...

//ஈழத்தில் இன்னல் குறைய இறைவனும் அருளட்டும்!//

ஆம். இறைவன்தான் அருள வேண்டும்.

ஈழத் திருத்தலங்கள்/தேவாரங்கள் பற்றிய அருமையான பதிவுக்கு நன்றி கண்ணா.

குடுகுடுப்பை said...

ரொம்ப நல்ல முயற்சி, ஈழ்த்தமிழர்கள் படித்தால் அவர்கள் நம்பிக்கை கூடும்.

கானா பிரபா said...

arumai arumai, mikka nanri

குமரன் (Kumaran) said...

அடியேனும் அத்திசை நோக்கி வணங்குகிறேன். வேண்டுகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@சிவத்தமிழோன் ஐயா

வாங்க ஐயா; நெடிய விளக்கத்துக்கும், நாவலர் சுட்டிகளுக்கும் நன்றி!

சொல்ல வந்த பொருள் மாறிவிட்டது போல! பதிவில் திருத்தி விடுகிறேன்.
இது தான் சொல்ல வந்தது:

ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டு. அவர் ஒரு முறை ஆலயத்தை மீட்டுவித்தார்.
அதன் பின்னர் போரில் SLA-விடம் ஆலயம் சிக்கியது. அதைத் தமிழர்கள் மீட்புக் குழு மீண்டும் மீட்டது. ஆனால் இன்னும் முழுமையாக மீட்ட பாடில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்னிடம் திருக்கேதீச்சரத்தின் புகைப்படங்கள் உண்டு. அனுப்பிவைக்கின்றேன், தங்கள் மின்னஞ்சலைத் தருவீர்களேயானால்//

மிக்க நன்றி ஐயா! என் மின்னஞ்சல் ப்ரொபைல் பக்கத்திலும் இருக்கு.
shravan.ravi@gmail.com

//என்னுடைய வலைப்பூவில் திருக்கேதீச்சரத்தில் ஓடும் பாலாவித் தீர்த்தத்தின் புகைப்படமும் ஆலயப் புகைப்படமும் பிரசுரித்துள்ளேன்//

அருமை!
நண்பர்களே, இது தான் அந்தச் சுட்டி!
http://sivathamiloan.blogspot.com/2008/07/blog-post_18.html

அங்குள்ள பாலாவியின் புகைப்படத்தை இங்கும் எடுத்து இடுகிறேன்!

//இலங்கையின் ஐந்து மூலைகளிலும் ஐந்து ஈசுவரங்கள் //

திருக்கேதீஸ்வரம்
கோணேஸ்வரம்
முனீஸ்வரம்
நகுளேஸ்வரம்
இன்னொன்னு என்ன ஐயா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
ஈழத் தேவாரங்கள் மிக நன்றாக வந்திருக்கின்றன ரவி.//

நன்றி SK! ஒலிச்சுட்டி தேடினேன்! கிடைக்கலை!

ஈழத் தேவார ஒலிச்சுட்டிகள் அன்பர்கள் யாரிடமாச்சும் இருந்தால் தந்து உதவுங்களேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
ஆம். இறைவன்தான் அருள வேண்டும்.
ஈழத் திருத்தலங்கள்/தேவாரங்கள் பற்றிய அருமையான பதிவுக்கு நன்றி கண்ணா//

ஆமாம்-க்கா...
சிக்கல் பலமான சிக்கல். அது நமக்கே தெரியும்!
மனித முயற்சிகளோடு இறையருளும் கனிந்தால் தான் உண்டு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குடுகுடுப்பை said...
ரொம்ப நல்ல முயற்சி, ஈழ்த்தமிழர்கள் படித்தால் அவர்கள் நம்பிக்கை கூடும்.//

நன்றி குடுகுடுப்பை.
ஒரு நாட்டின் பிரச்சனை அரசியலைத் தாண்டி, நம்பிக்கை லெவலுக்கு வந்தது தான் சோகம்!

நம்பிக் கை கொடுப்போம்!
நம்பிக்கையும் கொடுப்போம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கானா பிரபா said...
arumai arumai, mikka nanri//

நன்றி காபி அண்ணாச்சி!
எப்ப கோணேஸ்வரம் போகலாம்-னும் சொல்லுங்க! ராகவனையும் உடன் கூட்டிக்கலாம்! பயணம் சூப்பரா இருக்கும் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
அடியேனும் அத்திசை நோக்கி வணங்குகிறேன். வேண்டுகிறேன்//

வடதிசை பின்பு காட்டி
தென் திசை இலங்கை நோக்கியா குமரன்?

வேண்டுதல்களும், விழைவுகளும் விரைவிலேயே கனியட்டும்!

RATHNESH said...

இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான நல்ல பதிவு. "நான் போட்டால் தெரியும் போடு; தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு" என்கிற பாட்டு தான் ஞாபகம் வந்தது. தங்கள் தமிழ் இலக்கிய ஈடுபாடு சந்தோஷம் அளிக்கிறது.

சம்பந்தரின் முதல் பாடலைப் பதிவில் தவிர்த்திருக்கலாம்; என்ன சப்பைக்கட்டினாலும் அடுத்த மதத்தினரைப் பழிக்கிற தன்மையைப் பக்தியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//RATHNESH said...
"நான் போட்டால் தெரியும் போடு; தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு" என்கிற பாட்டு தான் ஞாபகம் வந்தது.//

ஹா ஹா ஹா
வாங்க ரத்னேஷ் ஐயா!

//சம்பந்தரின் முதல் பாடலைப் பதிவில் தவிர்த்திருக்கலாம்;//

முதலில் நானும் அப்படித் தான் நினைச்சேன்! ஆனால் அப்படி ஒரு பாடல் இருப்பதென்னவோ உண்மை தானே? அதுவும் சம்பந்தர் பதிகத்தில் ஒவ்வொரு பத்தாம் பாட்டிலும் இப்படித் தான் பாடுவாரு!

இலங்கைத் தொடர்புடைய பெளத்தக் கருத்து இருந்ததால் மட்டுமே இங்கே பதிவிட எடுத்துக் கொண்டேன் ஐயா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்ன சப்பைக்கட்டினாலும் அடுத்த மதத்தினரைப் பழிக்கிற தன்மையைப் பக்தியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை//

உம்....
பக்தி-ன்னு அதை ஏன் பாக்குறீங்க?

நான் சப்பைக்கட்டு கட்ட மாட்டேன்! அந்தப் பாடல் பக்தியே இல்லை! பக்திப் பாமாலையில் ஆங்காங்கே சமுதாயக் கண்ணாடிகளும் சேர்ந்து தான் இருக்கு!

சம்பந்தர் ஏன் அப்படிப் பாடினார்-ன்னும் பதிவில் சொல்லி இருக்கேன்!
அவர் பிற மத வெறுப்பு கொண்டதைக் காட்டிலும், மத ஆதிக்க வெறுப்பு கொண்டார்-ன்னும் சொல்லிட்டேன்!

நாயன்மார் ஒருவர் "வெறுப்பு" என்னும் குணத்தைக் கொள்ளலாமா என்பது தனிக் கேள்வி!

பதிகம்-னாலே பக்தி, பிரபந்தம்-னாலே டோட்டல் பக்தி-ன்னு கொள்வது கூடாது.

சில இடங்களில் தேவார நூல்களுக்கு மாடத்தில் வைத்துப் பூசை போடுவது, அர்ச்சனை செய்வதெல்லாம் கூட உண்டு! அது தேவையே இல்லை! ஓவர் புனிதத் தன்மையை ஏற்றவே வேண்டாம்!

பக்தி சாராது, பல கருத்துக்களும் பதிகங்களில் சொல்லிட்டுப் போயிருக்காங்க! வெறுமனே இயற்கை அழகுப் பாசுரங்கள் கூட உண்டு. அன்றைய சமூகக் கால கட்டத்தில் தன் பார்வையையும் பதித்துச் சென்றுள்ளார் சம்பந்தர்.
அருணகிரியார் என்னென்னமோ எல்லாம் கூடச் சொல்லுவாரு!

சுமார் பதினெட்டாயிரம் தேவாரப் பாடல்களில் பக்தி நெறி காட்டும் பாடல்கள் பத்தாயிரம் இருக்கலாம்.
நாலாயிரப் பிரபந்தத்தில் 3800 மட்டுமே அத்யந்த பக்தியாகவும் இருக்கக் கூடும்!

ஒரு ஆழ்வார் பாசுரத்தில் ஆண் யானை, பெண் யானைக்கு, மூங்கிலை ஒடைச்சி, தேன் தொட்டு ஊட்டி விடும்! அதில் வேங்கடம் என்னும் பேரைத் தவிர வேற ஒன்னுமே பக்தி போல இருக்காது! :))

பக்தி இலக்கியங்கள் ரோஜா மலர்த் தோட்டங்கள் தான்! நறும் தமிழ் மணம் தான்!
ஆனால் ரோஜாத் தோட்டத்தில் இலையும் உண்டு, முள்ளும் உண்டு! மணம் வீசிக் கொண்டு தான் இருக்கு! ரோஜாவை மலர்களின் அரசி என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கோம்! :)

மெய் விளக்க பக்தி இலக்கியங்கள் = நம்மாழ்வாரின் தமிழ் வேதமான திருவாய்மொழி, திருமூலர் திருமந்திரம் போன்றன பக்தி இலக்கியங்களின் சாரம்! மற்றவை பக்தி + இலக்கியம்!

Anonymous said...

இலங்கையின் தற்போதைய நிலவரம் :இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துவமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்!

- கார்த்திநேசன்

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ(எம்)) மத்தியகுழு உறுப்பினரும் தமிழக தலைவர்களில் ஒருவருமான தோழர் உ.ரா.வரதராசன்,“இலங்கை தமிழர் பிரச்சினை: சி.பி.ஐ(எம்) நிலைப்பாடு சந்தர்ப்பவாதமா?”என்ற தலைப்பில் தீக்கதிர் இதழில் எழுதியுள்ள கட்டுரையொன்று, தேனீ இணையத்தளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் தமிழ் இனவாத சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள, இலங்கை ஒட்டுமொத்த மக்களுக்கெதிரானதும் விடுதலைப்புலிகளுக்காதரவானதுமான கிளர்ச்சிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துவரும் நிலைப்பாட்டால் எழுந்துள்ள நிலைமையை பிரதிபலிப்பதாக இக்கட்டுரையின் தலைப்பு உள்ளது. கட்சி அணிகள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்டோரின் மத்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமாக எழுந்துள்ள சந்தேகங்களை போக்குவதே தோழர் உ.ரா.வரதராசன் கட்டுரையின் நோக்கம். இந்தியத் தோழர்கள் மற்றும் இந்திய முற்போக்கு சக்திகள் மத்தியில் மட்டுமின்றி, இலங்கை கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இலங்கை முற்போக்கு சக்திகள் மத்தியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்மைகால நிலைப்பாடு சம்பந்தமாக சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளதைக் குறிப்பிடுவது அவசியம். இந்தியாவிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளையும்விடவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கை தமிழர் பிரச்சினையில் ஒப்பீட்டுவகையில் ஒரு சரியான நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்துவந்துள்ளது. அதாவது விடுதலைப்புலிகளின் தனிநாட்டுப் போராட்டத்தை உறுதியாக எதிர்க்கின்ற அதேநேரத்தில்,ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1983 முதல் எடுத்துவரும் நிலைப்பாடு. இதுவே இலங்கை கம்யூனிஸ்ட்டுகளின் நீண்டகால நிலைப்பாடுமாகும்.

1961ல் இலங்கை அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்து, வடக்கு கிழக்கில் அரச நிர்வாகத்தை சீர்குலைக்கும் விதத்தில் தமிழரசுக்கட்சி சத்தியாக்கிரகம் ஒன்றை மேற்கொண்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின பெருந்தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, நிலைமைகளை ஆராய்ந்தார். பின்னர் அவர் எழுதி வெளியிட்ட ‘இலங்கை தமிழர் பிரச்சினை என்ன?’என்ற நூலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நிலைப்பாடு காரணமாகவே சில மாதங்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் நடைபெற்ற அக்கட்சியின் தேசியகாங்கிரசுக்கு, இலங்கையிலிருந்து ஜே.வி.பி கட்சி அழைக்கப்படவில்லை. முன்னைய மாநாடுகளுக்குவழமையாக அழைக்கப்பட்டு வந்த இலங்கையின் ஜே.வி.பி கட்சி, அக்கட்சி தொடர்ச்சியாக பின்பற்றிவரும் சிங்கள குறுந்தேசிய நிலைப்பாடு காரணமாக அழைக்கப்படவில்லையென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது இலங்கை தமிழர் பிரச்சினையில், திராவிடக்கட்சிகளை போன்ற ஒரு நிலைப்பாட்டை சந்தர்ப்பவாதரீதியில் எடுத்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), தனது விஜயவாடா காங்கிரசுக்கு ஜே.வி.பியை அழைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்பொழுது தமிழகத்தில் உருவாகியுள்ள சந்தர்ப்பவாத, தமிழ் தேசியவாத அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தனித்துவம் பேணாது இழுபட்டு செல்கின்றதா என்பதே, அக்கட்சி ஆதரவாளர்களின் அங்கலாய்ப்பாக உள்ளது.

இலங்கை நிலவரம் சம்பந்தமான பார்வையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவறான ஒரு கண்ணோட்டத்தை எடுத்துள்ளதா என்ற சந்தேகத்தை தோழர் உ.ரா.வரதராசனின் கட்டுரையும் ஏற்படுத்துகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில், இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களை வகைதொகையில்லாமல் தொடர்ந்து கொலைசெய்து வருவதுபோலவும், அதற்கெதிராக விடுதலைப்புலிகள் தேசியவிடுதலைப் போராட்டம் ஒன்றை நடாத்திவருவதுபோலவும், தமிழக தமிழ் இனவாத சக்திகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. தோழர் வரதராசனின் கட்டுரை இதை அப்படியே பிரதிசெய்யாவிடினும், ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசாங்கத்தின் மீதே எல்லா குற்றச்சாட்டுகளையும் போட முயற்சிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. தமிழ்மக்கள் மத்தியிலிருந்த அனைத்து மாற்று ஜனநாயக சக்திகளையும்,முற்போக்கு சக்திகளையும் ஒருவர் பாக்கியில்லாமல் புலிகள் கொன்றொழித்ததைப் பற்றியோ,1987 ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்த்திலிருந்து, கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து சமாதான முயற்சிகளையும் குழப்பிவிட்டு புலிகள் ஒவ்வொருமுறையும் போருக்கு மீண்டு சென்றதைப்பற்றியோ, தோழர் உ.ரா.வரதராசன் குறிப்பிடாதது ஒரு கவலைக்குரியதே. இப்போதைய யுத்தம் கூட தோழர் உ.ரா.வரதசாசன் சொல்ல வருவது போல, அரசாங்கத்தால் வலிந்து ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. 2005 ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச புதிதாக ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதகாலம் நிறைவு பெறுவதற்குள், இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கூட வழங்காமல்,புலிகள் யாழ்ப்பாணத்தில் இராணுவ தாக்குதல்களை ஆரம்பித்ததின் விளைவாகவும், மாவிலாறு அணைக்கட்டை மூடி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாட முற்பட்டதனாலும் ஏற்பட்ட விளைவுகளின் தொடர்ச்சியே. தோழர் உ.ரா.வரதராசன் குறிப்பிடும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரத்து, கண்காணிப்புக் குழுவின் வெளியேற்றம், நோர்வே சமாதான முயற்சிகளின் தோல்வி என்பன,புலிகள் பிடிவாதமாக பின்பற்றிய யுத்தப்போக்கின் எதிர்விளைவுகளே. இவற்றை சரியாக புரிந்துகொள்ளாது, இவற்றுக்கான பொறுப்பை வரதராசனின் கட்டுரை மேம்போக்காக இலங்கை அரசாங்கத்தின் மேல் போட்டுச்செல்வது கவலைக்குரியது

. தற்பொழுது நடைபெறும் யுத்தத்தில் கூட வன்னியில் வாழுகின்ற தமிழ்மக்கள் படுகின்ற துன்பங்கள் புலிகளால் வேணுமென்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையே. இலங்கை அரச படைகளால் தமிழ்மக்கள் வதைபடுகின்றார்கள் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டால், தமிழகத் திராவிடக்கட்சிகளையும், தமிழக சினிமா நடிகர்களையும் உசுப்பி விடலாம் என்பதும் புலிகளால் முற்கூடியே திட்டமிடப்பட்டதே. பாதிக்கப்பட்ட வன்னி மக்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல வழிவகைகளைச் செய்திருந்த போதிலும், அவர்களை வன்னியியிலிருந்து வெளியேறாதபடி, புலிகள் தமது பாதுபாப்புக்காக தடுத்து நிறுத்தி,அந்த கொலைக்களத்தில் பலவந்தமாக வைத்திருக்கின்றனர். புலிகளின் இரும்புப்பிடியையும் மீறி, பல வன்னிமக்கள் உயிரை துச்சமாக மதித்து கடல்மார்க்கமாகவும், காட்டுப்பாதைகள் ஊடாகவும் வன்னியைவிட்டு வெளியேறுவதும், அவ்வாறு வெளியேற முற்படுபவர்களில் ஒரு பகுதியினர், புலிகளினால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதும் தினசரி நடந்த வருகிறது. புலிகளின் இந்த மிலேச்சத்தனமான, மனிதாபமற்றநடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, தமிழகக் கட்சிகள் எதுவும் கண்டிக்காதது அவர்களது ஒருபக்க பார்வையையும் பொறுப்பற்ற தன்மையையுமே எடுத்துக்காட்டுகிறது. கிழக்கு மாகாணத்தை புலிகளிடம் இருந்து விடுவித்த நடவடிக்கையின் போதும், இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான இடங்களுக்கு வந்து தற்காலிகமாக தங்கியிருக்கும்படி,அங்குள்ள மக்களை அழைத்திருந்தது. அதன்படி கிழக்கு மாகாண மக்கள் செய்தபடியால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதுடன், புலிகள் அங்கிருந்து ஓடோட விரட்டியடிக்கப்பட்ட பின்னர், மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறி, இப்பொழுது ஓரளவிற்கேனும் குறைந்தபட்ச ஜனநாயகபூர்வமான ஒரு வாழ்வை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் தற்போது எழுந்துள்ள நிலைமையை பொறுத்தவரையில், தமிழ்மக்களின் பிரச்சினையும், விடுதலைப்புலிகளின் பிரச்சினையும் வௌ;வேறானவை என்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, அனைத்து தமிழகக் கட்சிகளும் புரிந்து கொள்வது அவசியமானது.

தமிழ்மக்களின் பிரச்சினைகள் சமாதான வழியில், பேச்சுவார்த்தைகள் மூலமாக, அரசியல்ரீதியில் தீர்க்கப்பட வேண்டிவை. புலிகளின் பயங்கரவாத பிரச்சினை,இராணுவரீதியாக கையாளப்பட்டு,தோற்கடிக்கப்பட வேண்டியது. வன்னியில் தற்போது மேற்கொள்ளப்படும் இலங்கை அரச படைகளின் இராணுவ நடவடிக்கை,அந்த நோக்கத்துக்காகவே நடைபெறுகின்றது. புலிகளை தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்றோ, ஒரு தேசியவிடுதலை இயக்கம் என்றோ கருதி செயற்பட்டால், என்ன நடக்கும் என்பதை இலங்கையின் கடந்தகால அனுபவங்கள் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அதுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற மக்களை நேசிக்கும் ஒரு கட்சி, ஒரு பாசிச இயக்கம் பற்றிய விடயத்தில் மிகவும் தெளிவாகவும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம். இப்பொழுது தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள, தீய நோக்கங்கொண்ட தவறான தமிழ்தேசிய இனவாத அலையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கேயுரிய சர்வதேசியத்துவ நிலைப்பாட்டில் நின்று அணுகவேண்டும். இதைவிடுத்து ஏதாவதொரு சந்தர்ப்பவாத அடிப்படையில் அதனை அணுக முற்பட்டால், அது இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வர்க்க –அரசியல் அடிப்படைகளையே தகர்த்துவிடும் அபாயம்தான் ஏற்படும் என்பதை கவலையுடனும் கரிசனையுடனும் சுட்டிக்காட்டவேண்டியது இலங்கை கம்யூனிஸ்ட்டுகளின் கடமை என கருதுகின்றோம். குறிப்பு: கட்டுரையாளர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)யின் முன்னைநாள் அரசியல்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.thenee.com/html/211008-9.html

Anonymous said...

இங்கே தேனி கட்டுரையைப் போட்டவரின் ஒரேயொரு கேள்வி.

கெளசல்யன், பாவா உட்பட சிங்கள அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கொல்லப்பட்ட புலிகளின் உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் எந்த வகையில் சேர்த்தி? புலிகள் யுத்தம் தொடங்கிய பிறகா கொல்லப்பட்டார்கள்?

Anonymous said...

கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் உண்மையான காரணங்கள் இவைதான்!
பார்த்தசாரதி
இலங்கை தமிழர்படும் இன்னல்களை நினைத்து தான் நிம்மதியும் இல்லாமல், நித்திரையும் இல்லாமல் தவிப்பதாக தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த கூற்றை பார்க்கும்போது, இந்த தள்ளாத வயதிலும் எவ்வளவு சாதுரியமாக அவரால் நடிக்க முடிகிறது என்ற வியப்புதான் ஏற்படுகின்றது. ஆனால் இலங்கை தமிழருக்காக கருணாநிதி நிம்மதியையும் நித்திரையையும் இழப்பதானால், அதனை அவர் எப்போதோ இழந்திருக்க வேண்டும். அதுவும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒரு பங்காளியாக இருக்கும் கருணாநிதிக்கு, நாலரை ஆண்டுகளாக வராத இலங்கை தமிழர் மீதான பாசம், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அந்த இரண்டரை ஆண்டுகளாக வராத அக்கறை, இப்பொழுது திடீரென பொத்துக்கொண்டு வந்தது ஏன் என்ற கேள்வியை தமிழக மக்கள் கேட்பதில் தவறேதும் இல்லை.
ஏறத்தாள கடந்த கால் நூற்றாண்டாக புலிகள் செய்துவந்த படுகொலைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருப்பது அல்லது அவர்களுடன் ஊடல்பாணியில் சரசம் விடுவது, கருணாநிதியின் அரசியல் நாகரீகத்தில் அல்லது ராஜதந்திரத்தில் ஒன்று. எனவே அதைவிட்டுவிடுவோம். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மீது இப்பொழுது திடீரென சீறிப்பாயும் கருணாநிதி, இவ்வளவு காலமும் ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் என கேட்கும் உரிமை நமக்குண்டு. இலங்கை இராணுவம் கிழக்கு மாகாணத்தில் சம்பூரை கைப்பற்றியபோது,வாகரையை கைப்பற்றியபோது, குடும்பிமலையை கைப்பற்றியபோது, கொக்கட்டிச்சோலையை கைப்பற்றியபோது,திருகோணமலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது, வடக்கில் மன்னாரை விடுதலை செய்தபோது, துணுக்காயை கைப்பற்றி முறிகண்டிவரை முன்னேறியபோது, நிம்மதியையும் நித்திரையையும் இழக்காத கருணாநிதி, இப்பொழுது பிரபாகரனின் கடைசி இருப்பிடமான கிளிநொச்சியும் முல்லைத்தீவும் பறிபோகும் நிலையில், விழித்துக்கொண்டு வீராவேசம் கொள்வதற்கு காரணம் என்ன?
மேற்குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் இராணுவ நடவடிக்கையின்போது இலங்கைத்தமிழர்கள் கொல்லப்படவில்லையா? அல்லது அந்தப்பகுதிகளில் வாழ்பவர்கள் எல்லாம் இலங்கைத்தமிழர்கள் இல்லையா? அல்லது இப்போதைய வீராவேசத்துக்கு ஏதாவது சொந்த சுயநலம் காரணமாக இருக்கின்றதா என தமிழகத்தின் இதர அரசியல்வாதிகளும் அரசியல் விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும் ஆராய்வதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் கருணாநிதியின் அரசியல் குள்ளத்தனம் அவ்வகையானது. ஆனால் தமிழகத்தின் விடயமறிந்த அரசியல் விற்பன்னர்களின் கருத்துப்படி, கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் பிரதான காரணம் வேறு இரண்டு முக்கிய விடயங்களாகும். ஓன்று, அவரது வருங்கால அரசியல் கூட்டணி சம்பந்தமானது. மற்றது, தமிழ்நாட்டின் அனைத்துதுறை மக்களையும் கடுமையாக பாதிக்கும் மின்சாரவெட்டு சம்பந்தமானது. இந்த மின்சாரவெட்டு கிராமப்புறங்களில் எட்டுமணிநேரம் அமுலாக்கப்படுவதினால், விவசாயம்,மாணவர்களின் கல்வி, சிறுதொழிற்துறை என சகல மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பொதுவாகவே கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கை வைத்திருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மேலும் செல்வாக்கை பெற்றுவிடுமோ என கருணாநிதி அஞ்சுகிறார். இது அவரது நிம்மதி மற்றும் நித்திரையின்மைக்கு ஒரு காரணம். ஆனால் இதையும்விட அவரை வாட்டிவதைப்பது தி.மு.க. தலைமையிலான அவரது அரசியல் கூட்டணியில் ஏற்பட்ட உடைவுதான்.
கடந்த தமிழக மாநில தேர்தலில் தி.மு.க. ஒரு மகா கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. அ.தி.மு.கவையும் ம.தி;மு.கவையும் தவிர, மிகுதி அனைத்து கட்சிகளும் தி.மு.க. தலைமையிலான அக்கூட்டணியில் இடம் பெற்றன. அப்படி இருந்தபோதும் கருணாநிதியால் ஏனைய கூட்டணிகட்சிகளின் உதவியுடன் ஒரு சிறுபான்மை அரசையே அமைக்கமுடிந்தது. 243 பேர் அங்கத்துவம் கொண்ட தமிழக சட்டசபையில், தி.மு.கவுக்கு வெறுமனே 96 ஆசனங்களே கிடைத்தன. தி.மு.கவுக்கு ஏற்பட்ட இந்த தோல்வியை கண்டு,அன்றே கருணாநிதிக்கு நிம்மதி போய்விட்டது. அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. மேற்கொண்ட அரச ஊழியர்கள், தொழிலாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் மீதான அடக்குமுறை காரணமாகவேஅ.தி.மு.கவுடன் அதிருப்தியுற்றிருந்த அரசியல்கட்சிகளை இணைத்து, தி.மு.கவால் இந்த மகாகூட்டணியை உருவாக்க முடிந்தபோதிலும்,அதற்கு மக்கள் எதிர்பார்த்த ஆதரவை வழங்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டின. மக்களுக்கு அ.தி.மு.க. மீது அதிருப்தி இருந்தபோதிலும்,தி.மு.கவுக்கு வாக்களிக்காததிற்கு கருணாநிதி உருவாக்கி வந்த குடும்ப அரசியலே பிரதான காரணம். அண்ணாதுரை,நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், சத்தியவாணிமுத்து போன்றோரால் பல தியாகங்களின் ஊடாக உருவாக்கிய தி.மு.கவை, கருணாநிதி தனது குள்ள தந்திரங்களின் மூலம் இதனது குடும்ப சொத்தாக மாற்றியபின்னர், சாதாரண தி.மு.க. உறுப்பினர்களுக்கு கட்சி மீதான பற்றுதல் விட்டுப்போய் நீண்டநாட்களாகிவிட்டன. இப்பொழுது கட்சியுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள், அரசபதவிகளுக்காகவும் அரசாங்க கொந்தராத்துக்களுக்காகவும், வேறு பிற சலுகைகளுக்காகவும் வந்து சேர்ந்தவர்களே. கட்சியில் எத்தனையோ சிரேஸ்ட உறுப்பினர்கள் இருக்க, தனது மகன் ஸ்டாலினை தனக்குப்பின் அடுத்த முதலமைச்சராக்க கருணாநிதி திட்டமிட்டு வேலை செய்து வருகின்றார். அத்துடன் தனது மகள் கனிமொழியை ராஐயசபா உறுப்பினராக்கியதுடன், அவரை மத்திய மத்திய அமைச்சரவையிலும் சேர்க்க முயன்று வருகின்றார். (ஆனால் கனிமொழியின் தயாரும்,கருணாநிதியின் மூன்றாவது மனைவியுமான ராசாத்தி அம்மாள், தனது மகளை கருணாநிதிக்குப்பின் முதலமைச்சராக்க வேண்டும் என வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு பெண்ணை நிறுத்துவது கூடுதலான பயனைக்கொடுக்கும் என கருணாநிதிக்கு நெருக்கமான சிலரும் ஆலோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கெனவே தயாநிதி மாறன் விவகாரத்தால் சீர்குலைந்திருக்கும் குடும்ப விவகாரம், இதனால் மேலும் சிக்கலுக்குள் உள்ளாகிவிடுமோ என்ற கவலையும் கருணாநிதியைப் பீடித்துள்ளது என விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர்)
இத்தகைய ஒரு சூழலில்,தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே அவருக்கு தினமும் தொந்தரவு கொடுத்துவந்த,ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியை கருணாநிதியே வெளியேற்றிவிட்டார். ‘இங்கில்லாவிட்டால் அங்கு’என்பது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் எழுதப்படாத விதி என்பதால், ராமதாஸ் அடுத்த தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பார் என்பது நிச்சயம். இந்த சூழ்நிலையில் கருணாநிதிக்கு மேலும் ஒரு துரதிஸ்டம் நிகழ்ந்துவிட்டது. அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுஆயுத ஒப்பந்த விவகாரத்தால், இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியபோது, கருணாநிதி அவ்வாறு செய்யாமல் அதை ஆதரித்து வாக்களித்து இடதுசாரிகளின் வெறுப்பை தேடிக்கொண்டுவிட்டார். அதனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (சி.பி.ஐ.(எம்),சி.பி.ஐ.) தமிழ்நாட்டில் இனிமேல் தி.மு.கவுடனான கூட்டணி இல்லையென்று அறிவித்துவிட்டன. எனவே அவ்விருகட்சிகளும் கூட அடுத்த தேர்தலின்போது,அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது பெரும்பாலும் நிச்சயமாகிவிட்டது. அதை உறுதிசெய்வதுபோல ஒக்டோபர் 2ந் திகதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)இலங்கை தமிழர் பிரச்சினையை ஒட்டி ஏற்பாடு செய்த உண்ணாவிரதத்துக்கு தி.மு.க. அழைக்கப்படாததுடன், அ.தி.மு.கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் தாக்கத்தால் கவலைக்குள்ளான கருணாநிதி, ஒரு பத்திரிகை அறிக்கை மூலம் வெளிப்படையாகவே தனது கவலையை தெரியப்படுத்தியிருந்தார். அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்து உரையாடியுமிருந்தார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் உறவினரான தா.பாண்டியன், சென்ற தேர்தலின்போதே அ.தி.மு.கவுடன் கூட்டுச்சேரும் முயற்சியில் ஈடுபட்டவர் என்பது தமிழக அரசியல் வட்டாரங்கள் நன்கு அறிந்த ஒரு விடயம். இதனால் கருணாநிதியின் நிம்மதியும் நித்திரையும் மேலும் குலைவதற்கு இதுவும் ஒரு காரணம்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜயகாந்,தனது கட்சி யாருடனும் கூட்டுச்சேராது என்று அடிக்கடி சொல்லி வந்தாலும், (கருணாநிதி அவரது முதலாவது எதிரியாக இருப்பதால்) கடைசி நேரத்தில் ஜெயலலிதாவுடன் சேரக்கூடும் என்ற பயம் கருணாநிதிக்கு உண்டு. பெரும் செல்வாக்கு எதுவும் இல்லாவிட்டாலும்,திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் வெற்றிக்காற்று எந்தப்பக்கம் வீசுகின்றது என்று பார்த்து, அ.தி.மு.க. பக்கம் சேர்ந்துவிடுவார். பணத்துக்காக புலிகளுக்கு சார்பாக தீவிரமாக குலைத்துவந்தாலும், திருமாவளவன் அரசியல் இலாபத்துக்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர தயங்கப்போவதில்லை. ஏற்கனவே கடந்த தேர்தலின் போது,அ.தி.மு.க. அணியில் நின்று தேர்தலில் வென்றபின்னரே, சுயலாபம் கருதி திருமாவளவன் தி.மு.க. அணிக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை இவ்வாறு போனால் தி.மு.கவையும் காங்கிரசையும் தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய மகா கூட்டணியாக அ.தி.மு.க. கூட்டணி அமைவதுடன், அடுத்த தமிழக அரசாங்கம் ஜெயலலிதா தலைமையில் அமையும் என்பதும் திண்ணம். இந்த தலையிடி நிலைமைதான் கருணாநிதியின் நிம்மதியின்மைக்கும் நித்திரையின்மைக்கும் பிரதான காரணம். உண்மையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) தன்னை உண்ணாவிரதத்துக்கு அழைக்கவில்லை என்றதும்தான், கருணாநிதிக்கு இலங்கை தமிழர்மீது திடீர் அக்கறை பிறந்தது. அதனால் சென்னை மாங்கொல்லையில் கூட்டம்போட்டு,தான் இலங்கை தமிழர்; பிரச்சினையில் அக்கறையுடன் இருப்பதாக காட்ட முயன்றார். அப்பொழுதும் அவருக்கு திருப்தி வரவில்லை. கூட்டணிக் கட்சிகள் தன்னுடன்தான் இருக்கின்றன என காட்டவேண்டுமே என எண்ணினார். அதற்காக சர்வகட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதில் அவரது முன்னைய கூட்டணி கட்சிகளான பா.ம.க.,இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் என்பன கலந்துகொண்டது அவருக்கு சற்று மகிழ்ச்சியேயாயினும், அவர்கள் தொடர்ந்தும் கூட்டணியில் இருப்பார்களா என்ற சந்தேகமும் அவரது மனதை அரித்துக்கொண்டே இருக்கின்றது. அதனால் இரு வாரங்களுக்குள் இலங்கையில் மத்திய அரசாங்கம் தலையிட்டு இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தாவிட்டால், தமிழக எம்.பிக்கள் இருவாரங்களுக்குள் பதவி விலகுவார்களென எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரசை விட்டு விலகவும் தயங்கமாட்டேன் என்றவொரு செய்தியை இடதுசாரிகளுக்கு தெரிவித்து, அவர்கள் அ..தி.மு.க. பக்கம் போகாமல் பார்த்துக்கொள்வது கருணாநிதியின் தந்திரமாகும்.
அத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.(எம்)) தமிழ் மாநில செயலாளர் என்.வரதராசன் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மகன் ஸ்டாலினையும் மகள் கனிமொழியையும் நேரடியாக அனுப்பி நலம் விசாரித்து வரச்செய்தார் அத்துடன் தேவையேற்பட்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியை மையமாக வைத்து நாடாளாவிய ரீதியில் உருவாக்க முயலும் மூன்றாவது அணியில் கூட, தான் இணையக்கூடும் என்ற சைகைகளையும் கருணாநிதி இடதுசாரிகளுக்கு காட்டிவருகின்றார். அதனால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேருவதில் வெளிப்படையாக கோடிட்டுக் காட்டுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சற்று அடக்கி வாசிக்கிறது. அதற்கு காரணம் கருணாநிதி மூன்றாவது அணிக்கு தற்செயலாக வரக்கூடிய சூழல் உருவானால், அதை ஏன் கெடுப்பான் என்ற எண்ணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உண்டு. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள கூட்டணிக் குழப்பங்களால் நிம்மதியும் நித்திரையும் இழந்துள்ள கருணாநிதி, தன்னுடைய முன்னைய கூட்டணி கட்சிகளை தொடர்ந்தும் தன்னுடன் வைத்திருக்கும் ஒரு உத்தியாகவே, அடுத்ததாக இலங்கை தமிழர் பிரச்சினையை வைத்து மனித சங்கிலி போராட்டம் ஒன்றுக்கு ஒக்டோபர் 21ந் திகதி அழைப்பு விடுத்துள்ளார். (சென்னையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மனித சங்கிலி போராட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.) இப்போதைக்கு வேறு எந்தப்பிரச்சினையை வைத்து அவர்; கூட்டணி கட்சிகளை அழைத்தாலும், அவர்கள் முன்வரப்போவதில்லை என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால் தமிழகத்திலுள்ள் ஏறத்தாள எல்லாக்கட்சிகளும் இலங்கைத்தமிழர் பிரச்சினையை தூக்கிப்பிடித்திருப்பதால், அடுத்த தேர்தல்வரை கூட்டணி கட்சிகளை தன்பிடிக்குள் வைத்திருப்பதற்காக, இலங்கை தமிழர் பிரச்சினையை தொடர்ந்தும் ஒரு ஆயுதமாக பாவிப்பதே அவரது திட்டமாகும். இலங்கை தமிழர் படும் இன்னல்களால்தான், நிம்மதியையும் நித்திரையையும் தான் இழந்திருப்பதாக கருணாநிதி வெளியே சொல்லிக்கொண்டாலும், தன்னுடையதும் தனது குடும்ப வாரிசுகளினதும் அரசியல் எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வே அவரது அனைத்து அவலங்களுக்கும் அடிப்படைக் காரணங்களாகும். ஆனால் கருணாநிதி கையாளும் எந்தவிதமான தந்திரோபாயங்களும், அடுத்த தேர்தலில் அவரைக் காப்பாற்றி நிம்மதியையும் நித்திரையையும் கொடுக்கக்கூடிய சூழல் தமிழகத்தில் இல்லையென்பதே அங்குள்ள உண்மையான நிலவரமாகும்.
http://www.thenee.com/html/221008-2.html

Anonymous said...

இரவி,
ஆன்மீகப் பதிவு எழுதிவிட்டு அதில் ஏன் தேவையில்லாத கழிசடைகளை
மலங்கழிக்க விட்டு இருக்கிறீர்கள்? ஈழ மக்களின் விடுதலையை விரும்பாத
கற்பனைவாத சக்திகளின் கட்டுரைகளும், பிதற்றல்களும் பின்னூட்டத் தொகுப்பில் இடம்பெற வேண்டுமா?

ஆன்மீகப் பதிவென்று தெரிந்தும் இங்கு வந்து தன் கற்பனைவாத அரசியல் வாந்தியை எடுத்து சென்றிருக்கும் அன்பரே,
உங்கள் உளறல்களுக்குத் தான் உங்கள் இணையத் தளங்கள் உள்ளனவே..
ஏன் இப்போது அங்கு யாரும் வருகிறார்கள் இல்லையா? இல்லை உங்கள் ஆதரவு வாசகர்கள் குறைவா? இலவச விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு வந்து விட்டீர்களா?

Anonymous said...

நல்ல பதிவு...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Anonymous said...
இரவி,
ஆன்மீகப் பதிவு எழுதிவிட்டு அதில் ஏன் தேவையில்லாத கழிசடைகளை.....//

வேண்டாங்க! அவிங்கள எதுக்குச் சுடு சொல் ஆடணும்? நல்ல ஆன்மீகம் தீவிரமான கருத்துக்களை ஒதுக்கியும் விடாது! அதில் கலந்தும் விடாது!

பின்னூட்ட மட்டுறுத்தல் எடுத்துவிட்டால் இது போல் சில கருத்துக்கள் வரும் தான்! ஆனால் அவை தனி மனித ஆபாசங்களாக இல்லாத வரை சரி!

இங்கு வரும் வாசகர்கள் எதைப் படிக்கணும் என்பதை அறிந்தவர்கள்! அவர்களுக்கு வேண்டாத பின்னூட்டங்களைத் தானே ஸ்கிப் பண்ணிருவாங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Thooya said...
நல்ல பதிவு...//

நன்றி தூயா!

Anonymous said...

ஆறுதல் கூறுவதென்பது அன்பு நிறைந்த மனிதத்துவத்தின் வெளிப்பாடே.

எங்கும் (ஈழத்திலும்) அன்பும் அமைதியும் ஆனந்தமும் நிறைந்திட எல்லாம் வல்ல இறைவனை
உங்களுடன் நானும் பிரார்த்திக்கிறேன்.

சிவத்தமிழோன் said...

இலங்கையில் உள்ள ஐந்து ஈசுவரங்கள் ஆவன- திருக்கோணேசுவரம், திருக்கேதீசுவரம்,முன்னேசுவரம்,நகுலேசுவரம், தொன்றீசுவரம் என்பனவாகும். தொன்றீசுவரம் இலங்கையின் தெற்குப்பகுதியில் இன்று சிங்கள மக்கள் வாழும்பகுதியில் (இலங்கையின் தெற்குப் பகுதி இன்று பெரும்பாண்மையாக சிங்களவர் வாழும் பகுதியாகும்.) அன்று இருந்தது. போர்த்துக்கேயர் இடித்தழித்த பின்னர், இங்கு காணப்படும் நந்திதான் பழைய புராதன சிவாலயத்தின் எச்சம்.

முன்னேசுவரம் 64 சக்திபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. நயினை நாகபூசணி அம்மன் ஆலயமும் அவ்வாறு கருதப்படுவதுண்டு. மதுரையில் மீனாட்சி ஆட்சியொக்க இங்கு முன்னை நாயகியின் ஆட்சி என்று சிறப்பித்துக் கூறுவர்.
இராமேசுவரத்தோடு தொடர்புடைய இராமனின் பிரம்மகிர்த்தித் தோசக்கதை இவ்வாலயத்துக்கும் இன்னுமொரு சிவாலயமான மாமாங்கேசுவரத்திற்கும்(மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் என்பர் பிள்ளையார் அங்கி அணிந்தபடி காட்சியளிப்பதால்.)பொருந்தும். ஒரே கதை மூன்று ஆலயங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.எனினும் நேரடியாக கம்பராமயணத்தில் இராமேசுவரம் சொல்லப்பட்டுள்ளதால் இராமேசுவரம் பிரபல்யமாகிவிட்டது.

நகுலேசுவரம் நகுலமுனிவர் (கீரிமுகம் கொண்டிருந்த காரணத்தால் ஏற்பட்ட காரணப்பெயரேயாகும்.)என்பவரின் தவத்திற்கு இரங்கிய இறைவன் அவரின் கீரிமுகத்தை நீங்கி மனிதமுகம் அளித்து அருள் புரிந்த திருத்தலம் இதுவாகும்.



குறித்த ஐந்து ஈசுவரங்களுடன்(விஜயன் வரும்போது காணப்பட்டதாக சிங்கள வரலாற்றுநூல் கூறுகிற) மாமாங்கேசுவரம், கொக்கட்டிச் சோலை தான்தோன்றிசுவரம், ஒட்டிசுட்டான் தான்தோன்றிசுவரம், ஈழத்துச் சிதம்பரம் எனப்படும் காரைநகர் சிவாலயம், வண்ணை வைதீசுவரம்,சித்தங்கேணி சிவன் கோயில்,பொன்னம்பலவானேசுவரம் போன்று பல்வேறு சிவாலயங்கள் உண்டாகும்.

தற்போது நான் தங்களுக்கு சில திருக்கேதீச்வர திருத்தல புகைப்படங்களை அனுப்பிவைக்கிறேன். தங்கள் வலைப்பூவில் ஈழத்து வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்களைப்பற்றி பிரசுரிக்கப்பட்டதால் பலபேருக்கு ஈழத்திலும் தேவாரப்பாடல்பெற்ற திருத்தலங்கள் உண்டு என்ற செய்தி சென்றடைந்துள்ளது. பெருமைப்படுகிறேன்.பூரிப்படைகிறென்
நன்றி.தங்கள் தமிழ்ப்பணியும் சமயப்பணியும் மேன்மைகொண்ட சைவநீதியை உலகமெலாம் விளங்கச்செய்ய உழைக்க வாழ்த்துகிறேன்.

சிவத்தமிழோன் said...

பொன்னம்பலவாணேசுவரம் (னே அல்ல) என்பதே சரியானதாகும். ஆலயப் பெயரை எழுதும்போது அடியேன் தவறிழைத்துவிட்டேன்.மன்னிக்க.

இந்தியாவில் உள்ள கற்கோயில்போல் ஈழத்தில் எதுவும் இல்லாக்குறையை நீக்க சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் தனது தந்தையாரால் பராமரிக்கப்பட்ட இக்கோயிலை கற்கோயிலாக எழுப்பி சைவத்தமிழ் உலகிற்கு வழங்கினார். இலங்கையின் தலைநகர் கொழும்பில் கொட்டகேனா(கொட்டாஞ்சேனை) எனும் இடத்தில் இவ்வாலயம் உள்ளது. கொழும்புக்கு செல்வோர் இவ்வாலயத்தை சென்று தரிசிக்கமுடியும். திருக்கேதீசுவரத்தை தரிசிப்பதென்பது சிரமம் தற்சமயத்தில். திருக்கோணேசுவர இறைவனை வணங்க நேரக்கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது.நகுலேசுவரத்தை வழிபட யாழ்ப்பாணம் செல்லவேண்டும். அது பெரும் சிரமம். முன்னேசுவரத்திற்கும் சென்று தரிசிக்கலாம். கொழும்பில் இருந்து ஏறத்தாழ மூன்று மணித்தியாலப் பயணம். சிவபூமி என்று திருமூலரால் போற்றப்பட்ட இலங்கையில் தமிழரின் அமைதியான வாழ்வு விரைவில் அமைய எல்லாம் வல்ல அந்த சிவப்பரம்பொருளை வணங்குவோம்.

Anonymous said...

Dr. Kalaignar M. Karunanithy
Chief Minister of Tamil Naad,
Respected Sir,
The Tamil People of Sri Lanka are glad that Tamil Naad has started showing interest in the Sri Lankan ethnic problem. But they are disappointed that the concerns of the Tamil People now trapped in the areas under the control of the LTTE are ignored. LTTE is using them as human shield to protect them. The People are also upset and worried that the enthusiasm displayed in Tamil Naad is showing tendencies of confrontation with the majority community the Sinhalese, with whom the Tamils had been living from time immemorial and will have to live in the future as well. Long before his assassination Mahatma Gandhi had warned that India and Ceylon can’t afford to quarrel each other, but more than that being immediate neighbours and having several things in common, Tamil Naad and Sri Lanka should maintain cordial relationship between the two.
We Sri Lankans remember with gratitude the innumerable detections in Tamil Naad, made by both the “Q” branch of the Tamil Naad Police and the Indian Navy, of several tons of material, including steel balls, aluminum foils, ball bearings and chemicals, used for the manufacture of bombs, claymore mines hand grenade etc. The credit goes to your Police of Tamil Naad and the Indian Navy for the detections, and if those detections had not taken place only God knows as to what would have happened to our countries. We are not un-mindful of what can happen to our country, if the LTTE is allowed to operate freely in Tamil Naad and that is why I re-iterate that both Tamil Naad and Sri Lanka should maintain close relationship between them. We can’t forget so easily as to what happened to Hon Rajiv Gandhi and there is no guarantee that a similar incident will not take place again, if the LTTE is allowed to operate freely in Tamil Naad. Please see that a Jaffna is not created in Tamil Naad.
The decision of the All Party Conference to seek the help of the Central Government to find an early solution is perfectly alright. But that is not the immediate need of our people trapped and kept under compulsion in Killinochchi by the LTTE. The decision of the All Party conference would have been more appropriate if it had also decided to request the Central Government to compel the LTTE to release the innocent civilians detained by force in areas under their control. The ultimatum of two weeks given to the Central Government to act has caused a furore among the hardliners in Sri Lanka, causing embarrassment to the Sri Lankan Government, which is aware of the compelling need to maintain good relationship with India.
I hope you will concede that all those who are in the fore-front of the campaign hardly know anything about the happenings in Sri Lanka and act only on the testimony of some LTTE supporters, who themselves are mis-led by some others. They never bother to find out the truth. Tamil Naad should be warned of the danger in acting on the advice of the TNA Members of Parliament who were fraudulently elected as members with the fire power of the LTTE and they act only as proxies of the LTTE. They carry out LTTE’s orders. No one cared to come to Sri Lanka to find out the truth. The people in Sri Lanka live in constant fear and tension due to the LTTE’s claymore- mine, land- mine and hand- grenade attacks that are taking place everyday in some part of Sri Lanka. That had caused the death of several innocent Sinhala Tamil and Muslim people. This is perhaps why no one from India undertakes a trip on a fact finding mission to Sri Lanka. It is this menace that we are trying to get rid of.
Hope you will recollect our first meeting in early 1976, over thirty years back. I was then the Member of Parliament for Killinochchi. Why we met is irrelevant here. But imagine what my feelings would be to see the people, with whom I lived for very many years, now living under the subjugation of the LTTE, deprived of almost all their rights and detained under compulsion for well over quarter of a century. You say that you are unable to eat or sleep with the Tamil problem not solved. If so Sir, how can I live peacefully?
Things are going from bad to worse everyday. But due to the false propaganda by the agents of the LTTE, the innocent people, cinema actors, university students of Tamil Naad hail them as heroes. If Tamil Naad wants a Jaffna without realizing the consequence only God can save it. But is Tamil Naad fair by the other States in exposing them also to the grave risk they face from suicide bombs, claymore mines etc. The children of the LTTE leaders have the best of education in Foreign Countries. So are the children of the TNA Members of Parliament too. The TNA Member’s families are settled in foreign countries. The children of the poor parents are sent to the battle front as sacrificial animals and as suicide bombers. They killed the Ex Prime Minister of India in Tamil Naad. They took away all the properties of the Muslims of the North who are Tamil speaking and lived with us for generations. They sent them out of the North with just 500 Rupees to live in refugee camps in the Sinhalese areas for over 17 years now. Our culture and civilization are gone. Our children’s education is ruined. According to recent news reports over six thousand children in the East do not know their alphabets.
The following are extracts from two letters I wrote to the Hon Dr. Manmohan Singh – Prime Minister of India and to the Secretary General of the United Nations His Excellency Ban-Ki-Moon the purpose of which is to impress on you that the LTTE had not shown any change in their behavior.
In my letter dated 16-01-2006 I wrote to the Hon. Prime Minister, “What the Sri Lankan Tamils need today is liberation from the LTTE, the so called liberators of the Tamils. It is very unfortunate that some leaders of Tamil Naad, without understanding the real problem fully and with hardly any knowledge of the ground situation in the North and the East of Sri Lanka, are trying to hold the Indian Government to ransom, with its numerical strength in Parliament. The Tamil Naad Members of Parliament who have joined the alliance should stop their veiled threats to the Government. They should study the situation and either help to find a solution or leave the matter entirely in the hands of the Central Government, to help the Sri Lankans to find a solution for their problem”.
In my letter dated 08-10-2005 to the Secretary General of United Nations I wrote, “ I take full responsibility for all what I have said here. The people who had been living in areas under the control of the LTTE sacrificed enough and it should be noted that all their sacrifices, tolerance and sufferings were all borne by them for the sake of their children. Now with a demand from the LTTE for one person from each house-hold they are prepared to defy the LTTE and revolt against them. They are also prepared to welcome and give all co-operations for a friendly army that will give an undertaking to give protection for their lives and properties inspite of any provocation that they may have to face, while engaged in the process of liberating them” .

I quote two paragraphs from my letter written to you when you had good relationship with both Mr. Vaiko and Mr. Nedumaran dated 08.10.2005 I wrote thus, “ In the interest of the Tamils of Sri Lanka the leaders of Tamil Naad should forget all their political differences and get together to find a solution to the ethnic problem. I have had discussions with a number of Sinhalese leaders of political parties most of whom are agreeable to accept a solution based on the Indian pattern of devolution. I am confident that there will be hardly any opposition to this proposal. We Tamils in Sri Lanka can’t expect anything more than that since we know the Indian attitude towards the creation of a separate Tamil State. Successive Governments of India had clearly spelt out that they can’t support separation. The Tamils of Sri Lanka can’t confront India on this issue”.

“You will be doing a great service to the Tamil People of Sri Lanka who are living in total subjugation in areas under the control of the LTTE. I am confident that you have the capacity to convince leaders like Hon.Vaiko and Mr.Nedumaran of the need for an early solution bases on the Indian pattern of devolution. It will be acceptable to a larger section of the Sinhalese, Tamils and Muslims as well. Having convinced the Leaders of Tamil Naad you should take up this issue with Delhi and through Delhi with the Sri Lankan Government. Your facilitation for talks on this basis will certainly bear fruit and will also be welcomed by the International Community. It will not be rejected by any body. The leaders of Tamil Naad too should feel glad to play a role in finding a solution to a long standing problem”.
Sir, we missed a good opportunity in October in 2005. Another opportunity has now come on your way to intervene and help to solve the ethnic problem easily. In an interview to the PTI too Members of Parliament of the TNA who are proxies of the LTTE had said that they are agreeable for a reasonable solution within a united Sri Lanka. This stand will certainly make things easy for you to help to find a solution. Please act immediately without any hesitation.
Thanking you,
Yours Sincerely
V.Anandasangaree
President -TULF
http://www.thenee.com/html/241008-6.html

Anonymous said...

Please visit at the following site to read the news.

http://www.defence.lk/new.asp?fname=20081027_06

Anonymous said...

I never new about these places earlier. Good info

//இறைவன் தங்களைக் காப்பாற்றும் நிலை போய், மானிட ஜென்மங்கள் தாங்களே, தங்கள் தங்கள் இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று மடமையால் தோன்றுவது தான் இத்தனை அடாவடிகளும்!
//

Well said.

Eezhaval said...

//தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா என்பதால்....
இலங்கைக்கும் இறைவா போற்றி//

தென்னாட்டுக்குள் ஈழமும் அடங்கும் என்று தவறாக எண்ணி விட்டேன்.

அருமை. நன்றிகள்.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

Anonymous said...

siva thondukku nantri

Anonymous said...

siva thondukku nantri


siva foundation periyasingalanthi
thiruthuraipoondi thiruvarur