Thursday, March 18, 2010

அருட்சோதி தெய்வம்! எனை ஆண்டுகொண்ட தெய்வம்!

லபதே சுதராம் பக்திம்
அநதே விஷ்ணு பதம் பவேத்!
துளசீ பூ மகாலக்ஷ்மீ
பத்மினி ஸ்ரீஹரிப் ப்ரியா!

துளசி ஸ்ரீசகி சுபே
பாபஹாரிணி புண்யதே!
நமஸ்தே நாரதனுதே
நாராயண மனப்ரியே!


(பூமியில் பக்தியைத் தருபவளே! இறுதியில் மாலோன் பதம் அருள்பவளே! துளசீ! பூமியில் மகாலக்ஷ்மி! தாமரையாளே! ஹரிப்ரியையே! துளசீ! திருவின் துணைவியே! மங்கலமானவளே! பாவங்களை அழிப்பவளே! புண்ணியத்தை அருளுபவளே! நாரதரால் வணங்கப்படுபவளே! நாராயணனின் மனப்ரியையே! உனக்கு வணக்கங்கள்!)

அருட்சோதித் தெய்வம் - எனை
ஆண்டுகொண்ட தெய்வம்!
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்!!

பொருட்சாரும் மறைகள் எலாம்
போற்றுகின்ற தெய்வம்!
போதாந்தத் தெய்வம் - உயர்
நாதாந்தத் தெய்வம்!!



இருட்பாடு நீக்கிஒளி
ஈந்தருளும் தெய்வம்!
எண்ணியநான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்!!

தெருட்பாடல் உவந்து எனையும்
சிவமாக்கும் தெய்வம்!
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்!!


வடமொழிப்பனுவல்: புண்டரீக முனிவர் இயற்றிய துளசி ஸ்தோத்ரம்
தமிழ்ப்பனுவல்: அருட்சோதி வள்ளலார் இயற்றிய திருவருட்பா, ஆறாம் திருமுறை, பரசிவ நிலை முதல் பாடல்
பாடலை வலையேற்றியது: நண்பர் இராகவன்!