Thursday, May 29, 2008

வாசி வாசி, மரா மரா! ஒன்றானவன், உருவில் இரண்டானவன்!

சிவபெருமானுக்கும் இராமபிரானுக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கு! என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்! ஒன்றானவன், உருவில் இரண்டானவன் தான் அவர்கள் இருவரும்!
அவர்கள் இருவரையும் குறிக்கும் மந்திரத்தில் தான் அந்த ஒற்றுமை இருக்கு! ஓசையில் தலைகீழாக மாற்றினாலும், திரும்பவும் விட்ட இடத்திற்கே வந்து சேரும் ஒற்றுமை அந்த இரண்டு மந்திரங்களுக்கும் உண்டு!

வால்மீகி முனிவர் முன்பு கள்வனாய் இருந்தார். அப்போது நாரத முனிவர் அவருக்கு மந்திர உபதேசம் செய்த கதை செவி வழியாக வழக்கில் நிலவுகிறது! நம்மில் பலருக்கும் தெரிந்த கதை தான் அது!
"ராம" என்று சொல்ல முடியாமல் நாக்குழறிய வால்மீகிக்கு, "மரா" என்று தலைகீழாகச் சொல்லத் தான் எளிதாய் வந்தது.

மரா மரா மரா என்பதே ராம ராம ராம என்று ஆயிற்று!
அதே போல் வாசி வாசி வாசி என்பதும் சிவா சிவா சிவா என்று உருப்பெறும், மனதில் கருப்பெறும்!

சிவ என்பதற்கும் ராம என்பதற்கும் ஒரே பொருள் தான்! அது தான் மங்களம்! மங்களகரமானது சிவ என்னும் திருநாமம்!
"நமசிவாய" என்பதைத் தான் திருவைந்தெழுத்து என்று தமிழிலும், பஞ்சாட்சரம் என்று வடமொழியிலும் சொல்கிறார்கள்!

நாம் கோயிலுக்குப் போனா, பொதுவா நமசிவாய-ன்னு வாயால் சொல்லிட்டு, நடையைக் கட்டி விடுவோம்! ஆனால் அதன் பொருள் என்ன, அதை ஆழ்ந்து உணர்ந்து ஜபித்தால், மனதில் விளையும் ஆனந்தம் என்னன்னு யோசித்திருக்கோமா?
வாங்க இன்னிக்கு மிகவும் எளிமையாகப் பார்க்கலாம்! நுட்பமான பொருளை மாதவிப்பந்தலில் பின்னர் சொல்கிறேன்!


ஐந்து எழுத்துக்கள் (அட்சரங்கள்) அமையப் பெற்றிருக்கும் மந்திரம்!
ந + ம + சி + வா + ய!
மேலோட்டமான பொருள்: நம (வணங்குகிறேன்), சிவாய (சிவனை)!
நுட்பமான பொருள்: (முன்பு அடியேன் ஓம் நம நாராயணாய என்னும் திருவெட்டெழுத்துக்குச் சொன்னது போலத் தான்...)
ந+ம = இல்லை+எனது=எனதில்லை
சிவாய = (அனைத்தும்)சிவனுடையதே!


பஞ்சாட்சர தத்துவம் மிகவும் பெரிது! திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பலவாறு விளக்குவார்! பஞ்சாட்சரமே மொத்தம் ஐந்து வகையாய் இருக்கு!
ஆமாம் மொத்தம் ஐந்து வகையான ஐந்தெழுத்து! இதோ.....

நமசிவாய = ஸ்தூல பஞ்சாட்சரம்
சிவாயநம = சூட்சும பஞ்சாட்சரம்
சிவாயசிவ = கரண பஞ்சாட்சரம்
சிவாய = மகா கரண பஞ்சாட்சரம்
சி = முக்தி பஞ்சாட்சரம்

எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும், ஆண் பெண் பேதமின்றி, சாதி மத பேதமின்றி, தீட்டு/பூட்டு என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல், யார் வேண்டுமானாலும் துதி செய்யவல்லது இந்தத் திருவைந்தெழுத்து!
குளித்தோ, குளிக்காமலோ, உடுத்தியோ உடுத்தாமலோ, உண்டோ, உண்ணாமலோ எப்போது வேண்டுமானாலும் ஜபிக்க வல்ல மந்திரம் இது!

இதன் பெருமையைப் பலரும் போற்றி உள்ளனர். திருமூலர் சிவசிவ என்று சிந்தித்து இருந்தால் தீவினை எல்லாம் தீரும் என்கிறார்.
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே


சம்பந்தப் பெருமான், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை, நன் நெறிக்கு உய்ப்பது, நாதன் நாமம் நமசிவாயவே", என்று இசைக்கிறார்!
அப்பர் சுவாமிகள், "இல்லக விளக்கது இருள் கெடுப்பது, நல்லக விளக்கது நமச்சி வாயவே" என்று பஞ்சாட்சரத்தைப் பாடுகிறார்.

இப்படி, இறைவனைக் காட்டிலும், அவன் திருநாமம் மிகவும் பெருமை வாய்ந்த ஒன்று!
அன்றொரு நாள் அந்தப் பெண்ணுக்கு நடுச்சபையில் இறைவன் வந்து கைகொடுக்கும் முன்னரே, அவன் திருநாமம் தானே வந்து கைகொடுத்தது!

இனிய தமிழில், சம்பந்தரும் அப்பரும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளினார்கள்!
அதே போல் ஆதிசங்கரரும் சிவ பஞ்சாட்சரம் என்ற ஒன்றினை வடமொழியில் அருளிச் செய்துள்ளார்!
நாகேந்திர ஹாராய திரிலோசனாய என்று தொடங்கி, நம சிவாய, நம சிவாய என்று முடியும்!
முதல் சுலோகத்தில் தஸ்மை ’ந’ காராய நமசிவாய என்று முதலெழுத்தைச் சொல்லுவார்! இதே போல் ஒவ்வொரு சுலோகத்திலும் பஞ்சாட்சரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் விளக்கிச் சொல்லுவார் ஆதி சங்கரர்!

இது சிவன் பாட்டில் அடியேன் முதல் பதிவு!
அதனால் எளிமைக்காக இத்துடன் நிறுத்தி, ஒரு அழகான பாட்டைப் பார்க்கலாம் வாங்க!



திருவிளையாடல் படத்தின் இறுதியில் இதைக் கேட்டிருப்பீங்க! சிவபெருமான் ஒளவையாரைப் பாடச் சொல்லுவார்! உடனே அன்னை உமையவள், "ஒன்று இரண்டு மூன்று" என்று எண்களால் இறைவனை வரிசைப்படுத்திப் பாடச் சொல்ல,
நம்ம கேபி சுந்தராம்பாள் தன் கணீர்க் குரலில் எடுக்கும் எடுப்பு இருக்கு பாருங்க, அப்படியே நம்மிடம் ஒட்டிக் கொள்ளும்! சிறிது நேரத்தில் பாட்டும் நமக்கு மனனம் ஆகிவிடும்!
இது தான் இசையால் துதிப்பதால் வரும் பெருமை! நீங்களே பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!


பாடலை இங்கு கேட்கலாம்! வாசி வாசி என்று தான் தொடங்குகிறது, மரா மரா-வைப் போலவே!

வாசி வாசி என்று வாசித்த தமிழ் இன்று
சிவா சிவா என சிந்தை தனில் நின்று
அவாவினால் இந்த ஒளவைத் தமிழ் கொண்டு
கவிபாடினான் உன்னைக் கண் குளிரக் கண்டு!


ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என ஐந்தானவன்,


இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்,
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்,
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்,
தித்திக்கும் நவரச வித்தானவன்!

பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்!
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்!
முற்றாதவன்! மூல முதலானவன்!
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்!


ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்!
அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன்!
தான் பாதி உமை பாதி கொண்டானவன்!
சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்!

காற்றானவன், ஒளியானவன்! நீரானவன் நெருப்பானவன்!
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்! அன்பின் ஒளியாகி நின்றானவன்!


குரல்: கே.பி.எஸ்
வரி: கவியரசர் கண்ணதாசன்
இசை: கே.வி.மகாதேவன்
படம்: திருவிளையாடல்


ஐந்து எழுத்து என்ன? அதன் பொருள் என்ன? என்று பதிவில் சொன்னேன்!
பாட்டில் வருவது போல், மற்ற எண்களுக்கு....
மூன்று தமிழ் என்ன?
நான்கு வேதம் என்ன?
ஆறு சுவை என்ன?
ஏழு சுரம் என்ன?
எட்டு பொருள் என்ன?
ஒன்பது (நவ) ரசம் என்ன?
இதை எல்லாம் பின்னூட்டத்தில் நீங்க சொல்லுங்க பார்க்கலாம்! :-)

ஓம் நம சிவாய!
சிவ சிவ!!
சிவோஹம்!!!

Tuesday, May 13, 2008

ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ!



சொக்கேசர் மதுரையம்பதியில் நடத்திய திருவிளையாடல்களை கூறும் பாடல் அடியேனுக்கு மிகவும் பிடித்த பாடல். சக்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல பத்மினியின் நடனம் அருமை.



படம்: மதுரை வீரன்

பாடல் : கண்ணதாசன்

இசை: G.இராமநாதன்




ஆடல் காணீரோ!
விளையாடல் காணீரோ!

ஆடல் காணீரோ
திருவிளையாடல் காணீரோ!

ஆடல் மதுரையின் ராஜ தம்பிரனாம் எங்கள்
ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ (ஆடல்)


ஊற்றுப்பெருக்காலே உவப்பூட்டும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கொரு ஆள் தந்து
வேந்தனின் ஆணை தன்னை
ஏற்று விணை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்


பிள்ளைப் பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து பித்தனைப் போலே

கைப்பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல் ஜீவராசிகள்
முதுகிலும் பட்டு வடுவுற்ற ஈசன் திருவிளையாடல் காணீரோ ( ஆடல்)


நரிதனை பரியக்கி பரிதனை நரியாக்கி
நாரைக்கு முத்தி கொடுத்து
உயர் நால்வேத பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து நக்கீரர்க்கு உபதேசித்து
வர குணப்பாண்டியர்க்கு சிவ லோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல்யாணைக்கு கரும்பூட்டி
வைர வளை முத்து வளை ரதன வளை விற்ற




திருவிளையாடல் காணீரோ
ஆடல் காணீரோ! திருவிளையாடல் காணீரோ!
ஆடல் மதுரையின் ராஜ கம்பீரனாம் எங்கள்
ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ .





Thursday, May 8, 2008

காதலாகிக் கசிந்து




நமச்சிவாய வாழ்க.சிவனடியார்களில் சரித்திரத்தில் உள்ளத்தை உருகவைப்பவர் நந்தனார்.வாழ்க்கையில் எப்படியாவது ஒருதரம் சிதம்பரத்தில் நடமாடும் நடராஜனை கண்டுவிடவேண்டும் என்பதில் ஆழ்ந்த பற்றுள்ளவர்.பல்வேறு இடையூறுகளை தாண்டி சிதம்பரம் வந்து விடுகிறார். தூரத்தில் இருந்தபடியே தில்லைக்கூத்தனின் கோயிலின் கோபுரத்தை பார்த்து பரவசமாகி கண்டறியாதன கண்டேன் என்று மனதில் உவகை பொங்க மெய்சிலிர்த்து கணகளில் ஆனந்த வாரி சொறிய பாடுகிறார்.இதுதானோ தில்லைத் தானம் என்ற ஊர்.ஆஹா இத்தனை நாள் தெரியாமல் வழ்க்கையை வீணடித்து விட்டேனே. அந்தத்தெயவம் இந்தத்தெய்வம் என்று ஒரு நிலை கொள்ளாமல் அலையும் நேயனை இதோ பிடி உனக்கு கதிஎன்று கைகாட்டி அழைத்திடும் கருணாநிதி அவன்

இந்த உலகத்தில் கயிலை என்று சொன்னால் அது சிதம்பரம் என்று எல்லோரும் கூறுகிறார்கள் ஆனால் நான் இதுவரை அதை ஒருதடவை கூட சிறப்போடு பார்த்ததில்லை. அப்பேற்ப்பட்ட தில்லையா இது இங்கேயா என் ஈசன் இருக்கிறான் என்று பாடுகிறார்.திருமதிகள். ரஞ்சனி காயத்ரி குரலில் கேட்டு, பார்த்துதான் பாருங்களேன். குரலின் குழைவும் ராகங்களின் பங்கீடும் மிக நேர்த்தியாக உள்ளது

கோபலகிருஷ்ண பாரதியின் பாடல் இது. பக்தியும் பணிவும் தாபமும் வெளிப்படும் விதம் கேட்பவர் மனதை உருகவைக்கும். திருவாசகத்துக்கு உருகாதவர்கூட நந்தனின் பாட்டுக்கு உருகுவார்கள்

ராகம்;- ஷ்ண்முகப்பிரியாகாதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது

வேதநான் கினும் மெய்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயமே

ஆடிய பாதனாய் நின்ற அம்பலத்தானை

நாடிய நேசற்கு நற்கதி நல்கியானை

கூடிய கரமும் நாவில் துதியுமாய்

தேடிய வந்தேன் புகல்


ராகம்:- பெஹாக் தாளம்:-ஆதி


பல்லவி

இதுதனோ தில்லைத்தலம்

இத்தனை நாளும் அறியேனே.....(இதுதானோ)

அனுபல்லவி

அதுவோ இதுவோ என்று அலைந்திடும் நேயனை

கதிதருவேன் என்று கைகாட்டி அழைத்திடும்...(இதுதானோ)

சரணம்

காசினியில் இதை கயிலை என்று எல்லோரும்

பேசக்கேட்டதே அன்றி பேணிப் பார்த்ததில்லை ....(இதுதானோ)








திருமதி. சௌமியாவின் குரலில் பாடலை இங்கே கேட்கலாம்<"click">