
சிவபெருமான் க்ருபை வேண்டும்! - அவன்
திருவருள் பெற வேண்டும்! வேறென்ன வேண்டும்?!
அவலப் பிறப்பொழிய வேண்டும்! - அதற்கு வித்த
அவமாயை அகல வேண்டும்! வேறென்ன வேண்டும்?!
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சாந்த
சுகவாழ்வு வாழ வேண்டும்! வேறென்ன வேண்டும்?!
காமம் முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
இராமதாசன் உய்ய வேண்டும்! வேறென்ன வேண்டும்?!
எழுதியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: அபிஷேக் இரகுராம்
இராகம்: சுருட்டி
தாளம்: ஆதி