Saturday, June 26, 2010

நானே கடவுள்! அஹம் ப்ரஹ்மாஸ்மி!



ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம்.
பைரவ ருத்ராய
மகா ருத்ராய
கால ருத்ராய
கல்பாந்த ருத்ராய
வீர ருத்ராய
ருத்ர ருத்ராய
கோர ருத்ராய
அகோர ருத்ராய
மார்த்தாண்ட ருத்ராய
அண்ட ருத்ராய
ப்ரஹ்மாண்ட ருத்ராய
சண்ட ருத்ராய
ப்ரசண்ட ருத்ராய
தண்ட ருத்ராய
சூர ருத்ராய
வீர ருத்ராய
பவ ருத்ராய
பீம ருத்ராய
அதல ருத்ராய
விதல ருத்ராய
சுதல ருத்ராய
மஹாதல ருத்ராய
ரசாதல ருத்ராய
தளாதல ருத்ராய
பாதாள ருத்ராய
நமோ நம:

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

நம: சோமாய ச ருத்ராய ச நம: தாம்ராய ச அருணாய ச நம: சங்காய ச பசுபதயௌ ச நம உக்ராய ச பீமாய ச நமோ அக்ரேவதாய ச தூரேவதாய ச நமோ ஹந்த்ரே ச ஹனீயசே ச நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ நம ஸ்தாராய நம: சம்பவே ச மயோ பவே ச நம: சங்கராய ச மயஸ்கராய ச நம: சிவாய ச சிவதராய ச

அண்ட ப்ரஹ்மாண்ட கோடி
அகில பரிபாலனா
பூரணா ஜகத் காரணா சத்ய தேவ தேவ ப்ரியா

வேத வேதார்த்த சாரா
யக்ஞ யக்ஞோமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா
சப்த லோக சம்ரக்ஷணா

சோம சூர்ய அக்னி லோசனா
ஷ்வேத ரிஷப வாகனா
சூல பாணி புஜங்க பூஷணா
த்ரிபுர நாச நர்தனா
வ்யோம கேச மஹாசேன ஜனகா
பஞ்ச வக்த்ர பரசு ஹஸ்த நம:

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல த்ரிசூல தாத்ரம்
சத்ய ப்ரபாவ திவ்ய ப்ரகாச மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் நிஜ பூர்ண போதகம் ஹம்
கத்ய கத்மாகம் நித்ய ப்ரஹ்மோகம் ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம்

சத் சித் ப்ரமானம் ஓம் ஓம்
மூல ப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம்

கன கன கன கன கன கன கன கன
சஹஸ்ர கண்ட சப்த விஹரதி

டம டம டம டம டும ரும டும ரும
சிவ டமருக நாத விஹரதி

ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ சங்கரா

***

அப்பாடா. முழுப்பாடலையும் தட்டிவிட்டேன். தட்டுவதற்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. எழுதியவரையும் பாடியவரையும் பாராட்டித் தான் தீர வேண்டும். இந்தப் பாடலின் பொருளழகும் பாடப்பட்ட முறையும் முதல் முறை கேட்டதில் இருந்து ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு வித மோன நிலையைத் தந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதன் பொருளை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இன்று தான் வாய்ப்பு கிடைத்தது.

***

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்


ஓம்.
பைரவ ருத்ராய
- பயங்கரமான ருத்ரன்
மகா ருத்ராய - பெரிய ருத்ரன்
கால ருத்ராய - கால வடிவான ருத்ரன்
கல்பாந்த ருத்ராய - கால முடிவான ருத்ரன்
வீர ருத்ராய - வீர ருத்ரன்
ருத்ர ருத்ராய - ருத்ரர்களில் பெரிய ருத்ரன்
கோர ருத்ராய - பயமுறுத்தும் ருத்ரன்
அகோர ருத்ராய - பயங்கரமில்லாத ருத்ரன்
மார்த்தாண்ட ருத்ராய - ஒளிவீசும் ருத்ரன்
அண்ட ருத்ராய - முட்டை வடிவ அகில ருத்ரன்
ப்ரஹ்மாண்ட ருத்ராய - மிகப்பெரிய அகில ருத்ரன்
சண்ட ருத்ராய - ஆவேசமான ருத்ரன்
ப்ரசண்ட ருத்ராய - மிக ஆவேசமான ருத்ரன்
தண்ட ருத்ராய - தண்டனையான ருத்ரன்
சூர ருத்ராய - பலம் பொருந்திய ருத்ரன்
வீர ருத்ராய - வீரனான ருத்ரன்
பவ ருத்ராய - பிறப்பிறப்புச் சுழலான ருத்ரன்
பீம ருத்ராய - வியப்புக்குரிய ருத்ரன்
அதல ருத்ராய - கீழ் உலகங்களின் முதலான அதல உலக ருத்ரன்
விதல ருத்ராய - இரண்டாவதான விதல உலக ருத்ரன்
சுதல ருத்ராய - மூன்றாவதான சுதல உலக ருத்ரன்
மஹாதல ருத்ராய - நான்காவதான மஹாதல உலக ருத்ரன்
ரசாதல ருத்ராய - ஐந்தாவதான ரசாதல உலக ருத்ரன்
தளாதல ருத்ராய - ஆறாவதான தலாதல உலக ருத்ரன்
பாதாள ருத்ராய - ஏழாவதான பாதாள உலக ருத்ரன்
நமோ நம: - போற்றி போற்றி

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

வீர - வீரன்
பத்ராய - மங்கலமானவன்
அக்னி நேத்ராய - தீக்கண்ணன்
கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன்
சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன்
சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன்
சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்

சம்போ சம்போ சங்கரா - இன்பத்தைத் தருபவனே மகிழ்ச்சியைத் தருபவனே இன்பத்தை உண்டாக்குபவனே!

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

(அடுத்து வருவது ஸ்ரீருத்ரம் என்னும் வேத மந்திரத்தின் பகுதி)

நம: சோமாய ச - உமையுடன் கூடியவனுக்கு வணக்கம்
ருத்ராய ச - அழுகையைத் தருபவனுக்கும் வணக்கம்
நம: தாம்ராய ச - தாமிர நிறம் கொண்டவனுக்கு வணக்கம்
அருணாய ச - சிவந்த நிறம் கொண்ட சிவனுக்கும் வணக்கம்
நம: சங்காய ச - மகிழ்ச்சியைத் தருபவனுக்கு வணக்கம்
பசுபதயௌ ச - எல்லா உயிர்களின் உரிமையாளனுக்கும் வணக்கம்
நம உக்ராய ச - உக்கிரமானவனுக்கு வணக்கம்
பீமாய ச - பயமுறுத்துபவனுக்கும் வணக்கம்
நமோ அக்ரேவதாய ச - அருகில் இருந்து அழிப்பவனுக்கு வணக்கம்
தூரேவதாய ச - தூரத்தில் இருந்து வதைப்பவனுக்கும் வணக்கம்
நமோ ஹந்த்ரே ச - அழிப்பவனுக்கு வணக்கம்
ஹனீயசே ச - அனைத்தையும் அழிப்பவனுக்கும் வணக்கம்
நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ - பசுமையான முடி கொண்ட மரங்களாக இருப்பவனுக்கு வணக்கம்
நம ஸ்தாராய - தாரக மந்திரமான ஓம்காரமானவனுக்கு வணக்கம்
நம: சம்பவே ச - அனைத்து இன்பத்திற்கும் பிறப்பிடமானவனுக்கு வணக்கம்
மயோ பவே ச - இம்மையும் மறுமையும் ஆனவனுக்கு வணக்கம்
நம: சங்கராய ச - இயல்பாகவே இன்பத்தைத் தருபவனுக்கு வணக்கம்
மயஸ்கராய ச நம: - பேரின்பத்தை மறுமையில் தருபவனுக்கும் வணக்கம்
சிவாய ச - மங்கல வடிவான சிவனுக்கு வணக்கம்
சிவதராய ச - எல்லோரையும் விட மங்கலமானவனுக்கு வணக்கம்

(ஸ்ரீருத்ர மந்திரப் பகுதி முடிந்தது)

அண்ட ப்ரஹ்மாண்ட கோடி அகில பரிபாலனா - கோடி கோடி உலகங்களாக நிற்கும் முட்டை வடிவான பிரபஞ்சத்தை நன்றாக நடத்துபவனே
பூரணா - முழுமையானவனே
ஜகத்காரணா - உலகத்தின் பிறப்பிடமே
சத்ய தேவ - உண்மைக்கடவுளே
தேவ ப்ரியா - தேவர்களுக்குப் பிரியமானவனே

வேத வேதார்த்த சாரா - வேதங்களுக்கும் வேதப் பொருளுக்கும் அடிப்படையானவனே
யக்ஞ யக்ஞோமயா - வேள்விகளின் உருவானவனே
நிஷ்சலா - சலனம்/அசைவு இல்லாதவனே
துஷ்ட நிக்ரஹா - தீமையை அகற்றுபவனே
சப்த லோக சம்ரக்ஷணா - ஏழுலகையும் நன்கு காப்பவனே

சோம சூர்ய அக்னி லோசனா - சந்திரன், சூரியன், தீ என்னும் மூன்று கண்களை உடையவனே
ஷ்வேத ரிஷப வாகனா - வெள்ளை விடை வாகனனே
சூல பாணி - திரிசூலம் ஏந்தியவனே
புஜங்க பூஷணா - பாம்புகளை அணிந்தவனே
த்ரிபுர நாச நர்தனா - மூவுலகையும் அழித்து ஆடுபவனே
வ்யோம கேச - மேலே தூக்கி முடித்த சடையை உடையவனே
மஹாசேன ஜனகா - தேவசேனாபதியான முருகனின் தந்தையே
பஞ்ச வக்த்ர - ஐந்து முகத்தோனே
பரசு ஹஸ்த நம: - மழுவேந்தியவனே போற்றி

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரனின் திருப்பெயரைப் போற்றுகிறேன் நான்

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

கால - காலமே
த்ரிகால - மூன்று காலமே
நேத்ர - கண்ணே
த்ரிநேத்ர - முக்கண்ணனே
சூல - சூலனே
த்ரிசூல தாத்ரம் - திரிசூலம் தாங்கியவனே
சத்ய ப்ரபாவ - உண்மைப் பெருமையுடையவனே
திவ்ய ப்ரகாச - தெய்வீகமான ஒளியை உடையவனே
மந்த்ர ஸ்வரூப மாத்ரம் - மந்திர உருவமாக மட்டும் இருப்பவனே

நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் - உலகமும் அதன் குறைகளும் இல்லாதவன் நான்
நிஜ பூர்ண போதகம் ஹம் - உண்மையான முழுமையான அறிவு உடையவன் நான்
கத்ய கத்மாகம் - படிக்கவேண்டியவற்றை எல்லாம் படித்தவன்
நித்ய ப்ரஹ்மோகம் - என்றும் பிரம்மமானவன்
ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம் - கனவுகள் இல்லாதவன் நான் நான் (வாழ்க்கை என்னும் பெருங்கனவு இல்லாதவன்)

சத் சித் ப்ரமானம் ஓம் ஓம் - உண்மையும் அறிவுமே ஆதாரங்கள் ஓம் ஓம்
மூல ப்ரமேயம் ஓம் ஓம் - உலகமே அறிவது ஓம் ஓம்
அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - இதுவே கடவுள் ஓம் ஓம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம் - நானே கடவுள் ஓம் ஓம்

கன கன கன கன கன கன கன கன சஹஸ்ர கண்ட சப்த விஹரதி - கன கன என்று ஆயிரம் குரல்களின் ஒலி கேட்கிறதே

டம டம டம டம டும ரும டும ரும சிவ டமருக நாத விஹரதி - டம டம டும ரும என்று சிவனின் உடுக்கை ஒலி கேட்கிறதே

ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ஓம் சிவோஹம் - ஓம் நானே சிவன்
ருத்ர நாமம் பஜேஹம் - ருத்ரன் நாமத்தை நான் போற்றுகிறேன்.

வீர - வீரன்
பத்ராய - மங்கலமானவன்
அக்னி நேத்ராய - தீக்கண்ணன்
கோர சம்ஹாரகா - பயங்கரமான அழிப்பவன்
சகல லோகாய - எல்லா உலகங்களுமானவன்
சர்வ பூதாய - எல்லா உயிர்களுமானவன்
சத்ய சாக்ஷாத்கரா - உண்மையை நேரடியாக அறிந்தவன்; அறியச் செய்பவன்

சம்போ சம்போ சங்கரா - இன்பத்தைத் தருபவனே மகிழ்ச்சியைத் தருபவனே இன்பத்தை உண்டாக்குபவனே!

இயற்றியவர்: கவிஞர் வாலி
இசையமைத்தவர்: இசைஞானி இளையராஜா
பாடியவர்: விஜய் ப்ரகாஷ்

16 comments:

வடுவூர் குமார் said...

பாடுவ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌மான‌ பாட‌ல் என்ப‌தை ஒரு சிறுவ‌ன் ஏர்டெல் சூப்ப‌ர் சிங்க‌ர் நிக‌ழ்ச்சியில் பாடிய‌போது அறிந்தேன்.

குமரன் (Kumaran) said...

ஷ்ராவன் பாடினதைச் சொல்கிறீர்களா குமார் சார்?

S.Muruganandam said...

பாடலுடன் விளக்கங்களும் அருமை குமரன் ஐயா.

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி கைலாஷி ஐயா.

அருட்சிவஞான சித்தர் said...

தங்களின் இறைத்தொண்டுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். பாடல்களும் விளக்கமும் நன்றாக உள்ளது.
மேலும் இவை போன்ற பாடல்களை வலையேற்றுவதற்கு இறைவன் தங்களை ஆசிர்வதிப்பார்.

இஸ்மாயில் said...

அய்யா இன்றுதான் தங்களின் இப்பதிவை பார்த்தேன். நான் தனிப்பட்ட முறையில் இதனை எனது செல்போன் ஹெட்போன் மூலம் கேட்கும் போதெல்லாம் எனது நாடி நரம்புகள் எல்லாவற்றிலும் ஊடுருவி என்னையும் மனதார ருத்ர தாண்டவம் ஆடவிடும் அற்புதமான பாடல்.

குமரன் (Kumaran) said...

நன்றி அருட்சிவஞானசித்தர் & இஸ்மாயில்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு பதிவு.

முனைவர் இரா.குணசீலன் said...

நானும் கடவுள் தான்!!

குமரன் (Kumaran) said...

நன்றி நண்பரே. :-)

smarttester said...

Thanks a lot for posting with lyrics meanings... giving great experience when i hearing this song with reading this lyrics silently. Simply Awesome.
Thanks once again for providing the meanings as well :)

குமரன் (Kumaran) said...

Glad to hear that smarttester

அரையாய் நிறை said...

mikka makilchi.porulkaludan valankiyamaiku mikka nandri.thiruchitrambalam ! thiruchitrambalam !!

குமரன் (Kumaran) said...

நன்றி ஐயா.

Kuber said...

நன்றி ஐயா.

பொன். கோ. எத்திராசன் said...

அகம் கனிந்த ஆத்ம வணக்கம் ஐயா. நன்றிகளும் நல் விழைவுகளும். சிவோஹம் = சிவமே = நான் . அறிவாக, நாமாக எல்லாமாக உயிர்களாக, தாவரங்களாக, கனிமங்களாக, அண்டங்களாக, ஐம்பூதங்களாக, நுண் அணுக்களாக, இயக்கமாக உள்ளதை ஆழ்ந்த அமைதியில் உணர்ந்து ஒன்றுவோம் அஹம் பிரம்மாஸ்மி = ஆழ்ந்த அமைதியே இறை. ஆழ்ந்த அமைதியில் ஒன்றி இறையுணர்வு பெறுவோம். மகிழ்ச்சி ஐயா.