Thursday, May 29, 2008

வாசி வாசி, மரா மரா! ஒன்றானவன், உருவில் இரண்டானவன்!

சிவபெருமானுக்கும் இராமபிரானுக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கு! என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்! ஒன்றானவன், உருவில் இரண்டானவன் தான் அவர்கள் இருவரும்!
அவர்கள் இருவரையும் குறிக்கும் மந்திரத்தில் தான் அந்த ஒற்றுமை இருக்கு! ஓசையில் தலைகீழாக மாற்றினாலும், திரும்பவும் விட்ட இடத்திற்கே வந்து சேரும் ஒற்றுமை அந்த இரண்டு மந்திரங்களுக்கும் உண்டு!

வால்மீகி முனிவர் முன்பு கள்வனாய் இருந்தார். அப்போது நாரத முனிவர் அவருக்கு மந்திர உபதேசம் செய்த கதை செவி வழியாக வழக்கில் நிலவுகிறது! நம்மில் பலருக்கும் தெரிந்த கதை தான் அது!
"ராம" என்று சொல்ல முடியாமல் நாக்குழறிய வால்மீகிக்கு, "மரா" என்று தலைகீழாகச் சொல்லத் தான் எளிதாய் வந்தது.

மரா மரா மரா என்பதே ராம ராம ராம என்று ஆயிற்று!
அதே போல் வாசி வாசி வாசி என்பதும் சிவா சிவா சிவா என்று உருப்பெறும், மனதில் கருப்பெறும்!

சிவ என்பதற்கும் ராம என்பதற்கும் ஒரே பொருள் தான்! அது தான் மங்களம்! மங்களகரமானது சிவ என்னும் திருநாமம்!
"நமசிவாய" என்பதைத் தான் திருவைந்தெழுத்து என்று தமிழிலும், பஞ்சாட்சரம் என்று வடமொழியிலும் சொல்கிறார்கள்!

நாம் கோயிலுக்குப் போனா, பொதுவா நமசிவாய-ன்னு வாயால் சொல்லிட்டு, நடையைக் கட்டி விடுவோம்! ஆனால் அதன் பொருள் என்ன, அதை ஆழ்ந்து உணர்ந்து ஜபித்தால், மனதில் விளையும் ஆனந்தம் என்னன்னு யோசித்திருக்கோமா?
வாங்க இன்னிக்கு மிகவும் எளிமையாகப் பார்க்கலாம்! நுட்பமான பொருளை மாதவிப்பந்தலில் பின்னர் சொல்கிறேன்!


ஐந்து எழுத்துக்கள் (அட்சரங்கள்) அமையப் பெற்றிருக்கும் மந்திரம்!
ந + ம + சி + வா + ய!
மேலோட்டமான பொருள்: நம (வணங்குகிறேன்), சிவாய (சிவனை)!
நுட்பமான பொருள்: (முன்பு அடியேன் ஓம் நம நாராயணாய என்னும் திருவெட்டெழுத்துக்குச் சொன்னது போலத் தான்...)
ந+ம = இல்லை+எனது=எனதில்லை
சிவாய = (அனைத்தும்)சிவனுடையதே!


பஞ்சாட்சர தத்துவம் மிகவும் பெரிது! திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பலவாறு விளக்குவார்! பஞ்சாட்சரமே மொத்தம் ஐந்து வகையாய் இருக்கு!
ஆமாம் மொத்தம் ஐந்து வகையான ஐந்தெழுத்து! இதோ.....

நமசிவாய = ஸ்தூல பஞ்சாட்சரம்
சிவாயநம = சூட்சும பஞ்சாட்சரம்
சிவாயசிவ = கரண பஞ்சாட்சரம்
சிவாய = மகா கரண பஞ்சாட்சரம்
சி = முக்தி பஞ்சாட்சரம்

எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும், ஆண் பெண் பேதமின்றி, சாதி மத பேதமின்றி, தீட்டு/பூட்டு என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல், யார் வேண்டுமானாலும் துதி செய்யவல்லது இந்தத் திருவைந்தெழுத்து!
குளித்தோ, குளிக்காமலோ, உடுத்தியோ உடுத்தாமலோ, உண்டோ, உண்ணாமலோ எப்போது வேண்டுமானாலும் ஜபிக்க வல்ல மந்திரம் இது!

இதன் பெருமையைப் பலரும் போற்றி உள்ளனர். திருமூலர் சிவசிவ என்று சிந்தித்து இருந்தால் தீவினை எல்லாம் தீரும் என்கிறார்.
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே


சம்பந்தப் பெருமான், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை, நன் நெறிக்கு உய்ப்பது, நாதன் நாமம் நமசிவாயவே", என்று இசைக்கிறார்!
அப்பர் சுவாமிகள், "இல்லக விளக்கது இருள் கெடுப்பது, நல்லக விளக்கது நமச்சி வாயவே" என்று பஞ்சாட்சரத்தைப் பாடுகிறார்.

இப்படி, இறைவனைக் காட்டிலும், அவன் திருநாமம் மிகவும் பெருமை வாய்ந்த ஒன்று!
அன்றொரு நாள் அந்தப் பெண்ணுக்கு நடுச்சபையில் இறைவன் வந்து கைகொடுக்கும் முன்னரே, அவன் திருநாமம் தானே வந்து கைகொடுத்தது!

இனிய தமிழில், சம்பந்தரும் அப்பரும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளினார்கள்!
அதே போல் ஆதிசங்கரரும் சிவ பஞ்சாட்சரம் என்ற ஒன்றினை வடமொழியில் அருளிச் செய்துள்ளார்!
நாகேந்திர ஹாராய திரிலோசனாய என்று தொடங்கி, நம சிவாய, நம சிவாய என்று முடியும்!
முதல் சுலோகத்தில் தஸ்மை ’ந’ காராய நமசிவாய என்று முதலெழுத்தைச் சொல்லுவார்! இதே போல் ஒவ்வொரு சுலோகத்திலும் பஞ்சாட்சரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் விளக்கிச் சொல்லுவார் ஆதி சங்கரர்!

இது சிவன் பாட்டில் அடியேன் முதல் பதிவு!
அதனால் எளிமைக்காக இத்துடன் நிறுத்தி, ஒரு அழகான பாட்டைப் பார்க்கலாம் வாங்க!



திருவிளையாடல் படத்தின் இறுதியில் இதைக் கேட்டிருப்பீங்க! சிவபெருமான் ஒளவையாரைப் பாடச் சொல்லுவார்! உடனே அன்னை உமையவள், "ஒன்று இரண்டு மூன்று" என்று எண்களால் இறைவனை வரிசைப்படுத்திப் பாடச் சொல்ல,
நம்ம கேபி சுந்தராம்பாள் தன் கணீர்க் குரலில் எடுக்கும் எடுப்பு இருக்கு பாருங்க, அப்படியே நம்மிடம் ஒட்டிக் கொள்ளும்! சிறிது நேரத்தில் பாட்டும் நமக்கு மனனம் ஆகிவிடும்!
இது தான் இசையால் துதிப்பதால் வரும் பெருமை! நீங்களே பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!


பாடலை இங்கு கேட்கலாம்! வாசி வாசி என்று தான் தொடங்குகிறது, மரா மரா-வைப் போலவே!

வாசி வாசி என்று வாசித்த தமிழ் இன்று
சிவா சிவா என சிந்தை தனில் நின்று
அவாவினால் இந்த ஒளவைத் தமிழ் கொண்டு
கவிபாடினான் உன்னைக் கண் குளிரக் கண்டு!


ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என ஐந்தானவன்,


இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்,
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்,
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்,
தித்திக்கும் நவரச வித்தானவன்!

பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்!
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்!
முற்றாதவன்! மூல முதலானவன்!
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்!


ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்!
அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன்!
தான் பாதி உமை பாதி கொண்டானவன்!
சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்!

காற்றானவன், ஒளியானவன்! நீரானவன் நெருப்பானவன்!
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்! அன்பின் ஒளியாகி நின்றானவன்!


குரல்: கே.பி.எஸ்
வரி: கவியரசர் கண்ணதாசன்
இசை: கே.வி.மகாதேவன்
படம்: திருவிளையாடல்


ஐந்து எழுத்து என்ன? அதன் பொருள் என்ன? என்று பதிவில் சொன்னேன்!
பாட்டில் வருவது போல், மற்ற எண்களுக்கு....
மூன்று தமிழ் என்ன?
நான்கு வேதம் என்ன?
ஆறு சுவை என்ன?
ஏழு சுரம் என்ன?
எட்டு பொருள் என்ன?
ஒன்பது (நவ) ரசம் என்ன?
இதை எல்லாம் பின்னூட்டத்தில் நீங்க சொல்லுங்க பார்க்கலாம்! :-)

ஓம் நம சிவாய!
சிவ சிவ!!
சிவோஹம்!!!

34 comments:

SP.VR. SUBBIAH said...

மூன்று தமிழ்: இயல், இசை, நாடகம்

நான்கு வேதம்: ரிக், யஜூர், சாம, அதர்வன வேதங்கள்

அறு சுவை: உப்பு,புளிப்பு, காரம், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு

ஏழு சுரங்கள்: ச,ரி,க,ம,ப,த,நி,ஸ

நவரசங்கள் ஒன்பது: மகிழ்ச்சி, துக்கம், ஆச்சர்யம், பயம், ரெளத்திரம், அகங்காரம்,, வெகுளித்தனம், பெருமிதம், வெட்கம்

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா!!!

வல்லிசிம்ஹன் said...

நன்றாகவே வருகிறார் நமச்சிவாயம்.
சிவராமன் என்று இப்படித்தான் பெயர் வந்ததோ!!

S.Muruganandam said...

திருவைந்தெழுத்துடன் அருமையான தொடக்கம் KRS சார்.

அன்பே சிவம்.

VSK said...

அரியும் சிவனும், அறியும் சிவனும் ஒன்றென உணர்த்தும் அரிய பதிவு!

ஒரே ஒரு திருத்தம்...

திரிலோசனாய என்பதற்குப் பதில் த்ரிலோசனாய எனப் போட்டால் நலம்.

வசி, சிவ
வசிப்பவன் சிவன்
சிவனே வசிப்பான்

நமசிவய

இப்போதுதான் உங்கள் விளக்கம் சரியாக வரும்.
//ந+ம = இல்லை+எனது=எனதில்லை
சிவாய = (அனைத்தும்)சிவனுடையதே!//

Unknown said...

எனக்கு மிகவும் பிடித்த சில பக்திப் பாடல்களில் இதுவும் ஒன்று!

குமரன் (Kumaran) said...

திருவைந்தெழுத்தின் பெருமையை மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் இரவி. தகுந்த பனுவல்களும் சுவையைக் கூட்டுகின்றன.

பனிமலையில் அமர்ந்திருக்கும் சிவகுடும்பம் அழகாக இருக்கின்றது.

சிவ என்றால் மங்கலம். சரி தான். இராம என்றால் மகிழ்வூட்டுபவன்; மகிழ்வானவன்; இரமிப்பவன்; இரமிப்பைத் தருபவன் என்று பொருள் அறிந்து வைத்திருந்தேன் இரவி. இராம என்றாலும் மங்கலம் என்றால் சரி தான். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
பனிமலைக் குடும்பப் படம் எனக்கும் மிகவும் பிடிச்சுது குமரன்.

//இராம என்றாலும் மங்கலம் என்றால் சரி தான். :-)//

ஹிஹி! உங்கள் புன்சிரிப்பு எதற்கோ குமரன்? மெளலி அண்ணா உங்களுக்கு ஏதாச்சும் தெரியுதா?
:-)

ராம என்பது ரமிக்கச் செய்வதில் இருந்து தான் வருகிறது!
ரம்யமாக (அழகாக) இருக்கிறது என்று சொல்கிறோம் அல்லவா?

ஆனால் ராம என்பதற்கு சொல்லின் பொருளையும் தாண்டி, மந்திரப் பொருளும் இருக்கு!
ராம, ரமணீய என்பதெல்லாம் மங்களங்களைக் குறிக்கும் மந்திரச் சொற்கள்!

ரமந்தே யோகினோநந்தே பிரம்மானந்தே சிதாத்மணீ என்பது ராம என்பதற்கு விளக்க வரும் பத்ம புராண சுலோகம்!

ரமிக்கச் செய்யும் ராமம் - ரமணீயமும் அளிக்கிறது!
ரமந்தே ரமந்தே என்கிறது சுலோகம்! அனந்தமயமான ஆனந்தம், மங்களகரமான ஆனந்தம் தருவதால் ரமணீயம்-ராமம்-ராம என்று ஆகிறது!

அதனால் தான் மொத்த விஷ்ணு சகஸ்ரநாமமும் ராம நாம வரானனே என்று "ராம" என்னும் ஒரே மந்திரத்தில் அடங்கிவிடுகிறது!

தாரக மந்திரம் என்று மந்திரத்தைக் கொண்டாடுவது ரெண்டே ரெண்டு தான்! ஒன்று பிரணவம், இன்னொன்று ராமம்!

எனவே தான் சகல மங்களங்களையும் கொடுப்பதால் ராம என்னும் மந்திரத்துக்கு மங்களப் பொருளும் உண்டு என்று சொன்னேன்! சரி தானே குமரன்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாத்தியார் ஐயா, டாண் டாண்-னு இந்தப் பதிவு போட்ட மாத்திரத்தில் வந்து விடை சொல்லிட்டாரு!
நான் தான் லேட்டு! என்ன இருந்தாலும் வாத்தியார் வாத்தியார் தான்! மாணாக்கன் அடியேன் பொடியேன் தான்! :-)

சரி எட்டுக்குச் சொல்லலையே? அஷ்ட வசு, எட்டு பொருள் என்ன??
எட்டு எட்டா மனுசன் வாழ்வைப் பிரிச்சிக்கோ-ன்னு தலைவர் பாட்டைச் சொல்லக்கூடாது! ஆமா! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@மெளலி அண்ணா!
நீங்க உள்ளேன் ஐயா சொன்னது நம்ம வாத்தியார் ஐயாவுக்கு! பாருங்க உங்க முன்னாடி இருக்காரு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிவராமன் என்று இப்படித்தான் பெயர் வந்ததோ!!//

இருக்கலாம் வல்லியம்மா!
சிவம்-ராமம் என்பதற்கு சூட்சுமப் பொருள் நிறைய உண்டு! சிவவாக்கியர் பாட்டில் இருக்கலாம்!

ராம என்பதை ராமாவதாரமாக மட்டும் பார்த்தால் புரியாது! அவதாரங்களில் கூட மூன்று ராமன்கள் ஆயிற்றே! சிவம்-ராமம் என்பது அவதாரங்களையும் தாண்டியது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Kailashi said...
திருவைந்தெழுத்துடன் அருமையான தொடக்கம் KRS சார்.//

கைலாஷி ஐயா
KRS-ன்னே சொல்லுங்க! போதும்! அடியேன் பொடியேன்! (இதுக்கு மேல பொடியேன்-ன்னு சொன்னா மெளலி அண்ணா என்னைய பொடிச்சிரிவாரு :-)

//அன்பே சிவம்//

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? அன்பே சிவம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திரிலோசனாய என்பதற்குப் பதில் த்ரிலோசனாய எனப் போட்டால் நலம்//

புரிகிறது SK!
வடமொழிச் சொற்களைத் தமிழில் பலுக்கும் போது வரும் ஓசைச் சிக்கல்கள் இவை! முதலில் சுப்ரபாதப் பதிவில் கூட த்ரிவிக்ரமன் என்று தான் எழுதினேன்!

ஆனால் வடமொழிப் பழக்கம் இல்லாத நண்பர்கள் பலரையும் சென்றடைய வேண்டி இருக்கு! அவர்கள் உச்சரிக்கச் சிரமப்படுவதால் திரிவிக்ரமன் என்று மாற்றி எழுதினேன்! தவறில்லை என்று நினைக்கிறேன்! உங்கள் கருத்து என்னவோ?

//வசி, சிவ
வசிப்பவன் சிவன்
சிவனே வசிப்பான்
நமசிவய//

நல்ல விளக்கம்! நன்றி SK!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@தஞ்சாவூரான்
எளிமையான பாடல்-ங்க! அதான் பல பேருக்குப் பிடிச்சிருக்கு!

தற்காலத்தில், சினிமா மூலமாகத் தான் பக்திப் பாடல்கள் பாமரர்களையும் சென்று அடைந்திருக்கு!
அதன் பெருமை பெரும்பாலும் கண்ணதாசன்-MSV/KVM அவர்களையே சாரும்!

SP.VR. SUBBIAH said...

/////kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வாத்தியார் ஐயா, டாண் டாண்-னு இந்தப் பதிவு போட்ட மாத்திரத்தில் வந்து விடை சொல்லிட்டாரு!
நான் தான் லேட்டு! என்ன இருந்தாலும் வாத்தியார் வாத்தியார் தான்! மாணாக்கன் அடியேன் பொடியேன் தான்! :-)
சரி எட்டுக்குச் சொல்லலையே? அஷ்ட வசு, எட்டு பொருள் என்ன??
எட்டு எட்டா மனுசன் வாழ்வைப் பிரிச்சிக்கோ-ன்னு தலைவர் பாட்டைச் சொல்லக்கூடாது! ஆமா! :-)//////

சரி பிடியுங்கள்: சித்திக்கும் பொருட்கள் எட்டு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், சூரியன், சந்திரன், கரணம் (ஆன்மா)

சரிதானே நண்பரே?
-----------------
உங்களுக்காகச் செட்டிநாட்டின் பிரபலமான அந்தப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்!

ஒர் எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் பெறாத கல்வியும்
மூவெட்டில் பெறாத மணமும்
நாலெட்டில் பெறாத குழந்தையும்
ஐந்தெட்டில் ஈட்டாத பொருளும்
ஆறெட்டில் பெறாத புகழும்
ஏழெட்டில் சுற்றாத ஸ்தலமும்
எட்டெட்டில் பெறாத மரணமும்
வீணே!

64 வயசுக்கு மேல் உயிரோடு இருந்தால் அது போனஸ்!

G.Ragavan said...

பாட்டு அருமையான பாட்டு. என்ன குரல்...என்ன தமிழ்...என்ன இசை. அடடா! எல்லாரையும் ஒரு வாட்டி கும்புட்டுக்கிறேன்.

பதிவு வழக்கம் போல நல்லாருந்துச்சு. சட்டுன்னு சிவன் பாட்டா ராமன் பாட்டான்னு சந்தேகம் வந்தாலும்.. ஒங்க பதிவுங்குறதால வந்த சந்தேகம் ஓடியே போயிருச்சு. :)

மத்ததெல்லாம் எப்படியோ.. ஒம்பது ரசங்களும் நல்லாத் தெரியும். செய்யவும் சாப்பிடவும்.

புளிரசம்
தக்காளி ரசம்
இஞ்சி ரசம்
பூண்டு ரசம்
மெளகு ரசம்
கொத்துமல்லி ரசம்
பருப்பு ரசம்
கொள்ளு ரசம்
எலுமிச்சை ரசம்

குமரன் (Kumaran) said...

லொள்ளு ரசத்தை விட்டுட்டீங்களே இராகவன். அந்த ரசம் உங்களுக்கும் சரி நம்ம சங்கரனுக்கும் சரி அந்த ஒன்றானவன் உருவில் இரண்டானவனுக்கும் சரி ரொம்ப பிடிக்குமே. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
எல்லாரையும் ஒரு வாட்டி கும்புட்டுக்கிறேன்//

வித்தை காட்ட ஆரம்பிக்கும் முன்னாடி சொல்லுறாப் போலவே சொல்லுறீங்க? என்ன ஜிரா? :-)

//சட்டுன்னு சிவன் பாட்டா ராமன் பாட்டான்னு சந்தேகம் வந்தாலும்.. ஒங்க பதிவுங்குறதால வந்த சந்தேகம் ஓடியே போயிருச்சு. :)//

எங்க ஓடிப் போச்சு? கைலாசமா? வைகுண்டமா? ஹா ஹா ஹா!

//ஒம்பது ரசங்களும் நல்லாத் தெரியும். செய்யவும் சாப்பிடவும்.//

சூப்பர்! டைரியில் குறித்துக் கொள்கிறேன். ஆம்ஸ்டர்டாம் வரும் போது பயன்படும்! :-)

//புளிரசம்
தக்காளி ரசம்
இஞ்சி ரசம்
பூண்டு ரசம்
மெளகு ரசம்
கொத்துமல்லி ரசம்
பருப்பு ரசம்
கொள்ளு ரசம்
எலுமிச்சை ரசம்//

பைனாப்பிள் ரசம்,
இஞ்சி ரசம்,
கூட்டு ரசம்,
கண்டதிப்பிலி ரசம்
வேப்பம்பூ ரசம்
போதாதுன்னு பெங்களூர் MTRல சாப்பிட்ட ஹெசருகாலு சாறு (பச்சைப்பருப்பு) ரசம்
இதையெல்லாம் யார் சொல்வாங்களாம்? லிஸ்டுல சேத்துக்குங்க ஜிரா!

ஆங்...அப்புறம் ஜீரா ரசம் (அட ஜீரக ரசம்ங்க) :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
//லொள்ளு ரசத்தை விட்டுட்டீங்களே இராகவன்//

ஹிஹி
அதான் கொள்ளு ரசம்-னு போட்டாரே! அது ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு தான்! :-)

//அந்த ரசம் உங்களுக்கும் சரி நம்ம சங்கரனுக்கும் சரி//

சங்கரனா? யாரு அவன்?
ராகவா சங்கரா கந்தா கடம்பா கதிர்வேலா! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//உங்களுக்காகச் செட்டிநாட்டின் பிரபலமான அந்தப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்!

ஒர் எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் பெறாத கல்வியும்
மூவெட்டில் பெறாத மணமும்
நாலெட்டில் பெறாத குழந்தையும்
ஐந்தெட்டில் ஈட்டாத பொருளும்
ஆறெட்டில் பெறாத புகழும்
ஏழெட்டில் சுற்றாத ஸ்தலமும்
எட்டெட்டில் பெறாத மரணமும்
வீணே!//

இந்த பாடலைப் கேட்டிருக்கேன் வாத்தியாரைய்யா...எனக்கு மிகவும் பிடித்த பாடல்...மறந்துவிட்டது....ஆம் நகரத்தார் வாழ்க்கை இந்த முறையில் இருந்ததால்தான் மிக சக்ஸஸ்புல்லா இருந்திருக்கிறார்கள் என்பார் எனக்கு தெரிந்த ஒரு நண்பர்.

மெளலி (மதுரையம்பதி) said...

//இரமிப்பைத் தருபவன் என்று பொருள் அறிந்து வைத்திருந்தேன் இரவி. இராம என்றாலும் மங்கலம் என்றால் சரி தான். :-)//

நான் இதையெல்லாம் பார்க்கல்லை...சாய்ஸ்ல விட்டுட்டேன்... :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//ரமந்தே யோகினோநந்தே பிரம்மானந்தே சிதாத்மணீ என்பது ராம என்பதற்கு விளக்க வரும் பத்ம புராண சுலோகம்!//

ஏதேது,என் பதிவில் அனானியா வந்த சுந்தர கனபாடிகள், உங்களுக்கு தனி மடல் அனுப்பிட்டாரோ?....

மெளலி (மதுரையம்பதி) said...

//சட்டுன்னு சிவன் பாட்டா ராமன் பாட்டான்னு சந்தேகம் வந்தாலும்.. ஒங்க பதிவுங்குறதால வந்த சந்தேகம் ஓடியே போயிருச்சு. :)//

மேலிருக்கும் ஜிராவின் இந்த கமண்டை நான் படிக்கல்லன்னு சொல்லிக்கறேன் :)

மெளலி (மதுரையம்பதி) said...

//லொள்ளு ரசத்தை விட்டுட்டீங்களே இராகவன். அந்த ரசம் உங்களுக்கும் சரி நம்ம சங்கரனுக்கும் சரி அந்த ஒன்றானவன் உருவில் இரண்டானவனுக்கும் சரி ரொம்ப பிடிக்குமே.//

அட ஆமாங்க...குமரனுக்கு, அதாவது குமரக்கடவுளுக்கு லொள்ளு பிடிக்கவே பிடிக்காது பாருங்க.. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@மெளலி அண்ணா
//அட ஆமாங்க...குமரனுக்கு, அதாவது குமரக்கடவுளுக்கு லொள்ளு பிடிக்கவே பிடிக்காது பாருங்க.. :-)//

இதுக்கு இது தான் பதில் மறுமொழி
//மேலிருக்கும் ஜிராவின் இந்த கமண்டை நான் படிக்கல்லன்னு சொல்லிக்கறேன் :)//

:-))))

SP.VR. SUBBIAH said...

////kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வாத்தியார் ஐயா, டாண் டாண்-னு இந்தப் பதிவு போட்ட மாத்திரத்தில் வந்து விடை சொல்லிட்டாரு!
நான் தான் லேட்டு! என்ன இருந்தாலும் வாத்தியார் வாத்தியார் தான்! மாணாக்கன் அடியேன் பொடியேன் தான்! :-)
சரி எட்டுக்குச் சொல்லலையே? அஷ்ட வசு, எட்டு பொருள் என்ன??
எட்டு எட்டா மனுசன் வாழ்வைப் பிரிச்சிக்கோ-ன்னு தலைவர் பாட்டைச் சொல்லக்கூடாது! ஆமா! :-)//////

சரி பிடியுங்கள்: சித்திக்கும் பொருட்கள் எட்டு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், சூரியன், சந்திரன், கரணம் (ஆன்மா)

சரிதானே நண்பரே?
-----------------
உங்களுக்காகச் செட்டிநாட்டின் பிரபலமான அந்தப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்!

ஒர் எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் பெறாத கல்வியும்
மூவெட்டில் பெறாத மணமும்
நாலெட்டில் பெறாத குழந்தையும்
ஐந்தெட்டில் ஈட்டாத பொருளும்
ஆறெட்டில் பெறாத புகழும்
ஏழெட்டில் சுற்றாத ஸ்தலமும்
எட்டெட்டில் பெறாத மரணமும்
வீணே!

64 வயசுக்கு மேல் உயிரோடு இருந்தால் அது போனஸ்!
May 30, 2008 2:10 PM

பின்னூட்டம் நேரத்தையும், தேதியையும் பாருங்கள்
கண்ணில் பட்டதா - இல்லையா சுவாமி?

ambi said...

//சட்டுன்னு சிவன் பாட்டா ராமன் பாட்டான்னு சந்தேகம் வந்தாலும்.. ஒங்க பதிவுங்குறதால வந்த சந்தேகம் ஓடியே போயிருச்சு. :)//

அடடா ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க ஜி.ரா. எனக்கும் இந்த பதிவை படிக்கும் போது இதே சந்தேகம் தான் வந்தது. ஹிஹி :))

ambi said...

அடடா ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க ஜி.ரா. எனக்கும் இந்த பதிவை படிக்கும் போது இதே சந்தேகம் தான் வந்தது. ஹிஹி

KRS அண்ணாச்சி, ஜொள்ளு ரசத்தை மறந்தாச்சா? :p

இலவசக்கொத்தனார் said...

ஆன்மீக வாசம் அடிக்குதேன்னு ஒதுங்கி நின்னா இப்போ ரச வாசம் வீசுது!! உள்ளேன் ஐயா!! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பின்னூட்டம் நேரத்தையும், தேதியையும் பாருங்கள்
கண்ணில் பட்டதா - இல்லையா சுவாமி?//

வாத்தியார் ஐயா! கோச்சிக்காதீங்க! நான் மாதவிப் பந்தலில் பதிவு போட்டே பல வருசம் ஆனா மாதிரி இருக்குது! எங்கும் ஆணி! எதிலும் ஆணி!

//நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், சூரியன், சந்திரன், கரணம் (ஆன்மா)
//

நீங்க சொன்னா சரியா இல்லாம இருக்குமா ஐயா?
சிலர் கரணத்துக்குப் பதிலா நட்சத்திரங்களை வசுவாகச் சொல்லுவாங்க! அம்புட்டு தான்!

மகாபாரதத்தில் கங்கையானவள் நீருக்குள் போடும் அஷ்ட வசுக்களின் தேவதைகள் பெயர் வேறு!

எனக்கு எட்டு-ன்னு ஒடனே, அஷ்ட வசுக்கள் ஞாபகம் வரல!
வேறு ஒரு உயர்ந்த பொருள் நினைவுக்கு வந்தது! அது என்னான்னு அம்பிக்கும் ஜிராவுக்கும் நல்லாவே தெரியும்! :-))

செட்டிநாட்டுப் பாடல் சூப்பர்! மணிவிழாவுக்கு அப்பறம் எல்லாமே போனஸ் தான் சூப்பராச் சொல்லிட்டாங்க! :-))

ஒரு செட்டிநாட்டுத் தாலாட்டுப் பாட்டும் கெடைச்சுது! அதைப் பிள்ளைத்தமிழ் பதிவில் இடுகிறேன்!
செட்டிமார் தெருவிலே என் கண்ணே
செண்டு விளையாடப் போகையிலே
செட்டிமார் பெண்டுக உன்
செண்ட விலைமதிப்பார்
தங்க மிதியடியாம் கண்ணே அது
தாலுகா கச்சேரியாம்
தாலுகா கச்சேரியில் உன் மாமன்
தந்தி பேசும் மந்திரியோ!
:-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடடா ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க ஜி.ரா//

ஜிரா சொன்னது ரெண்டு வாசகம்! ஒரு வாசகம் இல்ல! நல்லா கண்ணைத் தொறந்து பாரு அம்பி!
அங்கே சரம் முடிச்சி, இங்கே சரம் வெளையாட வந்தீக போல! :-)

//எனக்கும் இந்த பதிவை படிக்கும் போது இதே சந்தேகம் தான் வந்தது. ஹிஹி :))//

சந்தேகம் இங்க வேற யாருக்கும் வரல! உங்களுக்கு மட்டும் தான் வந்துச்சு போல!
வாசி வாசி, மரா மரா-ன்னு இணைச்சி சொன்ன பொருள் வாரியாரும், திருமூலரும் சொன்னது! ராமன் பாட்டா சிவன் பாட்டா-ன்னு நீங்க அவிங்க கிட்ட கேட்டா நல்ல வெளக்கம் கிடைக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@அம்பி
//ஜொள்ளு ரசம்//

இது என்னா சிவன் பாட்டா, இல்லை சிம்ரன் பாட்டா?
இந்த சந்தேகம் எனக்கும் வந்துச்சி! அப்புறம் இது உங்க பின்னூட்டம்-ன்னு பாத்தவுடன் வந்த சந்தேகம் ஓடியே போயிரிச்சி! :-)
இதையும் ஒருவாசகம் திருவாசகத்துல சேர்த்துக்கோங்க! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
ஆன்மீக வாசம் அடிக்குதேன்னு ஒதுங்கி நின்னா இப்போ ரச வாசம் வீசுது!! உள்ளேன் ஐயா!! :)))//

நம்ம ஜிரா கலக்கிய ஆன்மீக ரசம் அப்படி! பாருங்க உங்களை இழுத்துக்கிட்டு வந்திரிச்சி! கறிவேப்பிலை அடிச்சி தாளிச்சிறலாமா கொத்ஸ்? :-))

Dr. சாரதி said...

உங்களுடைய சிவதொண்டிற்கு என்னுடைய வாழ்த்துகள். தயவுசெய்து பிரதோச மஹிமை பற்றியும் எழுதவும்.